Skip to main content

விமான டிக்கெட்டுக்கு இ.எம்.ஐ வசதி - அசத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஸ்பைஸ்ஜெட்!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

spicejet

 

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், பயணிகள் தங்கள் விமான டிக்கெட் கட்டணத்தை மாதாந்திர தவணை முறையில் செலுத்தும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயணிகள் டிக்கெட் கட்டணத்தை 3, 6, அல்லது 12 தவணைகளில் செலுத்தலாம்.

 

இதில் மூன்று தவணைகளாக கட்டணத்தை செலுத்துபவர்களுக்கு எந்த கூடுதல் கட்டணமும் ( வட்டி) கிடையாது என அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த திட்டத்தில் சேர பயணிகள், தங்களது பான் எண்ணையும், ஆதார் எண் அல்லது மெய்நிகர் ஐடியை சமர்ப்பிக்க வேண்டும்.

 

அதேபோல் டிக்கெட் தொகையின் முதல் தவணையை யுபிஐ ஐடி மூலம் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள தவணைகள் அதே யுபிஐ ஐடியிலிருந்து பிடித்துக் கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்