குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஷால் ரிபரி. இவர் அம்மாநிலத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றிவருகிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் நீண்ட காலமாகவே காவல்துறை பணியில் இருந்துவருகிறார்கள். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவருக்கு, அணிவகுப்பில் கலந்துகொண்ட பெண் ஒருவர் சல்யூட் அடித்துள்ளார். அவர் சல்யூட் அடிக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகிவருகிறது. ஏனென்றால், சல்யூட் அடித்தவர் துணை கண்காணிப்பாளரின் அம்மா. அவரும் காவல்துறையில் எஸ்ஐ ஆக பணியாற்றிவருகிறார். மகனுக்குத் தாய் சல்யூட் அடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.