Skip to main content

பெங்களூரு செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Published on 24/10/2017 | Edited on 24/10/2017
பெங்களூரு செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

கர்நாடக மாநில சட்டசபையின் 60-வது ஆண்டு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பெங்களூரு வருகிறார்.

நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் முதன்முறையாக இன்று (24-ம் தேதி) கர்நாடக மாநிலத்துக்கு வருகைதரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பெங்களூரு நகரை உருவாக்கிய கெம்ப்பே கவுடாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர், பெங்களூரு அறிவியல் ஆய்வகத்தில் அறிவிலயலாளர்கள் பங்கேற்கும் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

நாளை (25-ம் தேதி) ’விதான சவ்தா’ என்றழைக்கப்படும் கர்நாடக மாநில சட்டசபையின் 60-வது ஆண்டு விழாவில் பங்கேற்கும் அவர், இரு அவைகளை சேர்ந்த உறுப்பினர்களிடையே உரையாற்றுகிறார்.

சார்ந்த செய்திகள்