Skip to main content

இந்தியாவை வாட்ச்மேன்களின் தேசமாக்க முயற்சிக்கிறார் மோடி...!

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற காலத்தை மாற்றி எல்லோரும் வாட்ச்மேன் என்ற நிலைக்கு கொண்டுபோயிருக்கிறார் மோடி என்று அரசியல் விமர்சகர்கள் கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

 

chowkidar modi

 

நான் வந்தால் இந்தியா வல்லரசாகிவிடும், கருப்புப்பணம் ஒழிந்துவிடும், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்றெல்லாம் ஆவேசமாக பேசி வாக்கு வாங்கி பிரதமரானவர் மோடி. ஆனால், இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் செய்த சாதனை என்ன என்று சொல்ல முடியாததால் சமீப காலமாக, தன்னை ஒரு ஏழைத்தாயின் மகன் என்றும், பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து வந்தவன் என்பதால் தன்னை ஒழிக்கப் பார்க்கிறார்கள் என்றும் அழுது புலம்பத் தொடங்கினார்.

 

இந்நிலையில்தான் ராணுவத்துக்கு வாங்கிய ரஃபேல் விமான பேரத்தில் பிரதமரே நேரில் தலையிட்டு, முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் 41 சதவீதம் அதிகமாக்கி, அனில் அம்பானி 18 நாட்களுக்கு முன் பதிவுசெய்த கம்பெனிக்கு சாதகமாக பேரத்தை முடித்தார் என்று ஆதாரபூர்வமாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த பேரத்தின் மூலம் மக்கள் பணம் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அனில் அம்பானிக்கு எடுத்துக் கொடுத்துவிட்டதாக ஆவணங்களில் கூறப்பட்டிருந்தது.

 

rahul

 

எனவே, காங்கிரஸ் தலைவர் பிரதமரே ஒரு திருடனாக இருக்கிறார் என்றார். ஆனால், தன்னை இந்தியாவின் வாட்ச்மேன் என்று மோடி கூறினார். உடனே, வாட்ச்மேனே திருடனாகிவிட்டார் என்று ராகுல் கூறினார்.

 

மோடி ஒரு திருடன் என்ற கோஷம் இந்தியா முழுவதும் ஒலிக்கத் தொடங்கிய நிலையில், மோடி தனது பெயரையே வாட்ச்மேன் மோடி என்று மாற்றிக்கொண்டார். அதுமட்டுமின்றி எல்லோரும் தங்களை வாட்ச்மேனாக கருத வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். உடனே அவருடைய கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தங்கள் பெயருக்கு முன் வாட்ச்மேன் என்ற அடைமொழியை இணைத்திருக்கிறார்கள். இதையே ஒரு இயக்கமாக மாற்ற மோடி விரும்புகிறார் என்றும், 25 லட்சம் வாட்ச்மேன்களிடம் பேசப்போகிறார் என்றும் கூறுகிறார்கள்.

 

இந்நிலையில்தான் பிள்ளைகளை வாச்மேனாக்க விரும்புகிறவர்கள்தான் மீண்டும் மோடிக்கு வாக்களிப்பார்கள் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கிண்டலடித்திருக்கிறார்.

 

aravind

 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், “இந்தியாவையே வாட்ச்மேன் தேசமாக மாற்ற மோடி விரும்புகிறார். அப்படிப்பட்ட வாட்ச்மேன்களில் ஒருவராக உங்கள் பிள்ளைகளை ஆக்க விரும்பினால் நீங்கள் மோடிக்கு மீண்டும் வாக்களியுங்கள். ஆனால், நீங்கள் உங்கள் பிள்ளைகளை படிக்கவைத்து டாக்டர்களாகவும், என்ஜினியர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் ஆக்கவே விரும்புவீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Arvind Kejriwal's aide's house raided by the enforcement department

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ்குமார் வீட்டிலும், ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளரும், எம்.பி.யுமான குப்தா வீட்டிலும் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் என 12 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்று (06.05.2024) காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Next Story

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்! 

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Enforcement department summons Delhi Chief Minister Arvind Kejriwal

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாகக் கைது செய்திருந்தது. அதே சமயம் அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவை கைது செய்து திகார் சிறையில் அடைத்து, அவர் தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். மேலும் இது தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

அதே சமயம் இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மூன்று முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். மேலும் அமலாக்கத்துறையின் சம்மன்கள் பொய்யானவை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4வது முறையாக தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்த சம்மனில் ஜனவரி 18 ஆம் தேதி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.