Skip to main content

கேரள அரசு 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்- உச்சநீதி மன்றம்

Published on 15/09/2018 | Edited on 15/09/2018
nambi


கடந்த 1994ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணன் என்ற இஸ்ரோ விஞ்ஞானி விண்வெளி திட்ட ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை, கேரள போலீஸார் நம்பி நாராயணனை கைது செய்து விசாரித்தனர். இதில் அப்போது கேரளாவின் முதல்வராக இருந்த கருணாகரனுக்கும் சம்மந்தம் இருக்கும் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி, கருணாகரனை பதவிவிலக செய்தது.
 

இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில் எந்தவித உளவு சதியும் இல்லை, தவறாக வழக்குத் தொடர்ந்த போலீஸார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றது. நம்பி நாராயணன், தேசிய மனித உரிமை ஆணையத்தில் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் 10 லட்சம் நஷ்ட ஈடு வேண்டும் என்றார்.
 

இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றம்  2015ம் ஆண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை கோரும் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து நம்பி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
 

இந்நிலையில் உச்சநீதி மன்றம், இந்த வழக்கில் நம்பி நாராயணனை தவறு செய்த அதிகாரிகள் யார்? இதன் பின்புலம் என்ன? என்பதையெல்லாம் விசாரணை மேற்கொண்டு உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழங்கியுள்ளார். நம்பி நாராயணனை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக கேரள அரசு அவருக்கு 50 லட்சம் நஷ்ட  ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

"நம்பி விளைவு: எங்களை சிறிது நேரம் வாயடைக்க செய்தது" - மயில்சாமி அண்ணாதுரை

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

"Nambi Effect: Made us speechless for a while" - Mylaswamy Annadurai about madhavan's Rocketry The Nambi Effect movie

 

இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற படத்தை நடிகர் மாதவன் இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது வருகிறது. மேலும் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து தங்களது கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

 

அந்த வகையில் தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படத்தை பார்த்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக மயில்சாமி அண்ணாதுரை தனது சமூக வலைதளபக்கத்தில், "ராக்கெட்ரி நம்பி விளைவு: எங்களை சிறிது நேரம் வாயடைக்க செய்தது. இஸ்ரோவில் மீண்டும் வாழ்ந்தது போல் உணர்ந்தேன். இது வெறும் திரைப்படம் அல்ல, ஒரு வரலாற்று சாதனை, திரையில் ஒரு காவியம்" என குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும், "இவர் பாதிக்கப்பட்டதுபோல இன்னொரு நம்பி மீண்டும் எதிர்காலத்தில் இருக்கக்கூடாது என்ற நம்பி நாராயணன் அவர்களின் நோக்கத்தையும் செயல்பாட்டையும் இந்தப் படத்தின் மூலம் பெரும் திரளான மக்கள் அறிந்துகொண்டிருக்கின்றனர். திரு. நம்பி நாராயணன் அவர்களுக்கும் இந்தியத் திரையுலகில் இந்த மகத்தான பணியை செய்தமைக்காக திரு.மாதவன் அவர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்." என படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

 

Next Story

"இதற்கு மாதவன்தான் பொருத்தமானவர்" - முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி புகழாரம்

Published on 24/03/2022 | Edited on 24/03/2022

 

nambi narayanan talk about Rocketry The Nambi Effect film

 

இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகிறார். மிகப்பெரிய விஞ்ஞானியாக அறியப்பட்டு பின் உளவாளி என முத்திரை குத்தப்பட்டு, அதன்மூலம் பல நெருக்கடிகளைச் சந்தித்தவர் நம்பி நாராயணன். பின்னாட்களில் அவர் நேர்மையானவர் என நிரூபிக்கப்பட்ட போதிலும் அவர் எதிர்கொண்ட இன்னல்களும் துயரங்களும் சொல்லி மாளாதவை. அவரது வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி பலரின் கவனத்தை பெற்றது. 

 

இந்நிலையில் துபாயில் நடைபெற்று வரும் துபாய் எக்ஸோ 2022 ல் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படத்தின் ட்ரைலர் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பார்த்த பாரவையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் உரையாடும் போது ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனிடம், நடிகர் மாதவனிடம் இப்படத்தின் கதையைச் சொல்ல வேண்டும் என்றபோது உங்கள் கருத்து எவ்வாறு இருந்தது என்பது குறித்து கேட்கப்பட்டதற்கு, அவர் கூறியதாவது.., “பொறியியல் துறை சார் அறிவின் சாராம்சத்தை புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரால் என் கதை சொல்லப்பட வேண்டும் என நான் விரும்பினேன். அந்தவகையில், மாதவன் ஒரு பொறியாளர் என்பதால், என் கதையை அவரிடம் சொல்வது எனக்கு மிக எளிதாக இருந்தது. என் வாழ்வின் ஒரு  குறிப்பிட்ட சூழ்நிலையில் APJ அப்துல் கலாமின் உயிரைக் காப்பாற்ற நான் எடுத்த முயற்சிகளை அந்த சம்பவத்தை நான் விளக்கத் தொடங்கிய நேரத்தில், மாதவன் நான் உச்சரித்த வார்த்தையில்  ‘வளிமண்டல அழுத்தத்தில் சமநிலையின்மை’ என்ற பதத்தை உடனடியாக  புரிந்துகொண்டார். அவரது இயல்பிலேயே பொறியியல் பற்றி நிறைய அறிந்திருந்தார். அதனால் எனக்கு மாதவன்தான் பொருத்தமாக இருந்தார்.

 

மேலும் ராக்கெட் விஞ்ஞானி, உண்மையின் பாதையில் செல்ல வேண்டும் ஒருவரால் உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால், நீங்கள் சோர்ந்து போய் விடக்கூடாது, நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும். என்ற செய்தியை இளைஞர்களுக்குத் தெரிவித்ததைக் கேட்டு, அங்கு குழுமியிருந்த மொத்த கூட்டமும் உற்சாகமடைந்தனர்.