Skip to main content

இந்தியாவில் வெகுவாக குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

corona

 

இந்தியாவில் கரோனா மூன்றாம் அலை ஏற்பட்டதில், 3 லட்சத்தைத் தாண்டிய தினசரி கரோனா பாதிப்பு, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 918 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று 2 லட்சத்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த 24 மணிநேரத்தில், கரோனவால் பாதிக்கப்பட்ட 959 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 628 பேர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் கரோனா உறுதியாகும் சதவீதம் 15.77 சதவீதமாக இருந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்