Skip to main content

‘முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி’ - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 24/09/2024 | Edited on 24/09/2024
High Court Order for CM Siddaramaiah Petition Dismissal

மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதற்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதோடு சித்தராமையாவின் மனைவி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். மேலும் மூடா மோசடி வழக்கு என அழைக்கப்படும் இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஊழல் தடுப்புச் சட்டம் 1998 சட்டத்தில் 17வது பிரிவு மற்றும் புதிதாக தற்பொழுது அமலுக்கு வந்திருக்கும் பாரதிய நாகரிக் சுரக் ஷா சம்ஹிதா வழக்கின் சட்டப் பிரிவின் 218வது பிரிவு என இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் சித்தராமையாவை விசாரிக்க அம்மாநிலத்தின் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கி இருந்தார். அதே நேரம் முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாதயாத்திரை போராட்டம் நடத்தி இருந்தனர். இதற்கிடையே  கர்நாடகா ஆளுநர் பாஜகவின் அழுத்தத்தாலும், மத்திய அரசின் அழுத்தத்தாலும் செயல்பட்டு இவ்வாறு செயல்பட்டு வருகிறார் எனக் காங்கிரஸ் பதில் குற்றச்சாட்டு தெரிவித்திருந்து.

High Court Order for CM Siddaramaiah Petition Dismissal

அதனைத் தொடர்ந்து சித்தராமையாவை விசாரிக்க மாநில ஆளுநர் அனுமதி அளித்த நிலையில் ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை சித்தராமையா நாடி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 12ஆம் தேதியுடன் விசாரணை நிறைவடைந்தது. இந்நிலையில் சித்தராமையா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா அமர்வு இன்று (24.09.2024) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்