Skip to main content

காதலர்களை கதறவிட்ட ஆதியோகித்நாத்தின் ஆன்டி-ரோமியோ படை!!

Published on 06/09/2018 | Edited on 06/09/2018

 

anti-romeo

 

 

 

உத்தரபிரதேசம் மாநிலதத்தில் பெண்களிடம் கேலி மற்றும் கலாட்டா செய்யும் ஆண்களிடம் இருந்து பாதுகாக்க அம்மாநில முதல்வர் ஆதியோகித்நாத் ஆன்டி-ரோமியோ படை என்ற பிரிவை ஏற்படுத்தியுள்ளார்.

 

anti-romeo

 

 

 

அவர் உருவாகியுள்ள அந்த ஆன்டி-ரோமியோ படை பூங்கா, சாலையில் பெண்களை கேலி கிண்டல் செய்யும் ஆண்களுக்கு தண்டனை தந்து வருகின்றனர். இந்நிலையில் கான்பூர் மாவட்டம் காடிட்  பகுதியில் ஒரு பூங்காவில் ஒரு இந்து பெண்ணும் முஸ்லீம் இளைஞரும் நெருக்கமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்த ஆன்டி-ரோமியோ படையினர் அவர்களை பிடித்து எச்சரித்தனர். பின்னர் அந்த பெண்ணை அந்த இளைஞரின் கையில் ராக்கி கட்டவைத்தும், தான் செய்தது தவறு என அந்த இளைஞரை அந்த பெண்ணின் காலில் விழவைத்து மன்னிப்பு கோரவைத்தும் அதை புகைபடமெடுத்து வெளியிட்டுள்ளனர் ஆன்டி -ரோமியோ படையினர். 

சார்ந்த செய்திகள்