Skip to main content

“வீட்டுக்கு ஒரு பசுமாடு கொடுத்தும் பர்கூரில் தோற்றார் ஜெயலலிதா!” -சாத்தூரில் ஆளும்கட்சியினரை விளாசிய வைகோ! 

Published on 05/12/2018 | Edited on 05/12/2018
vaiko



 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.  


“திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்த 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு பிப்ரவரியில் தேர்தல் வந்தாலும் வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலோடு நடந்தாலும் வெற்றி பெறும். இந்த 20 தொகுதிகளுடைய களப்பணிகளிலே மதிமுக முழுமையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பணிக்குழு அமைத்துவிட்டால், திமுகவுக்கு வேலை சுலபமாகிவிடும். இந்த 20 தொகுதிகளில் யார் வேட்பாளர்? தோழமைக் கட்சிகள் போட்டியிடுமா? இதையெல்லாம் திமுக தலைமை தீர்மானிக்கும். அதுகுறித்து பேசுவதற்கு இங்கு நான் வரவில்லை. இந்த 20 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுகவே போட்டியிடுமா? அல்லது தோழமைக் கட்சிகளுக்கு ஒன்றிரண்டு தொகுதிகளை விட்டுக்கொடுக்குமா? என்பதையெல்லாம் திமுக தலைமை முடிவு செய்யும். ஆனால், 20 தொகுதிகளிலும் எங்கும் ஆயத்தப்பணிகளில் மதிமுக தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும்.  பெரும் பண வெள்ளத்தை எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. ஓட்டுக்கு ஆயிரமோ, ரெண்டாயிரமோ, ஐயாயிரமோ தரலாம். ஆனால், அவர்கள் எவ்வளவு கொடுத்தாலும் சரி.  பர்கூர் தொகுதியில் வீட்டுக்கு ஒரு பசுமாடு கொடுத்தார் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதா அங்கு தோற்றுப்போனார்.



எங்கள் இயக்க வரலாற்றிலேயே, இப்படி ஒரு தேர்தல் களத்தில், நாங்கள் இதுபோன்று ஆயத்தமானது கிடையாது. பணிகளைத் திட்டமிட்டு செய்துகொண்டிருக்கிறோம். 66000 பூத்துக்களில் உள்ள பணிக்குழுவினருக்கு பேட்ஜ் கொடுக்கப் போகிறோம். தேர்தல் நடக்கும்போது, அந்த பேட்ஜோடுதான் வந்து நிற்பார்கள். மிகத்திட்டமிட்ட பணி. முறையாகச் செய்திருக்கிறோம்.” என்று பேசிவிட்டு, கேள்விகளுடன் காத்திருந்த செய்தியாளர்களிடம்,   “தமிழ்நாட்டு அரசியல், கஜா புயல், கவர்னர் பிரச்சனை, சட்டமன்றம் எப்போது கூடப் போகிறது? இப்படி பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதையெல்லாம் நான் சொன்னால், டிவிக்களில் அதைப் போடுவதற்கு இடம் கிடைக்காது. நிறைய கேள்விகளை நீங்க வச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். டிவியில் எனக்கு கொடுக்கிறது 3 நிமிஷம்தான். இதை மட்டும் போடுங்க. இல்லையென்றால் உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்வதைத்தானே டிவியில் போடுவீங்க? இதை எங்கே போடுவீங்க?” என்றவர், தன் மீதான விமர்சனம் குறித்த ஒரு கேள்விக்கு “விமர்சனமே வாழ்க்கை!” என்று சிரித்தார். 


வைகோவுக்கு யார் மீது என்ன கோபமோ?  மனதில் இருந்ததை கட்சி நிர்வாகிகளிடம் சாத்தூரில் கொட்டித் தீர்த்துவிட்டார். இதைச் சொல்லியிருக்க வேண்டாமே! பெரிய நியூஸாயிருமே! நான் எவ்வளவு ஆபத்தானவன்ங்கிறத அவங்க தெரிஞ்சிக்கனும். தூரத்தில் இருந்தால் இந்த நெருப்பு குளிரைப் போக்கும். உரசிப் பார்த்தால் இந்த நெருப்பு தீ பிடிக்கும். இதுதான் வைகோ. ஏன் இதைப் பேசுறேன்னா.. பேசணும். ராத்திரியெல்லாம் நான் தூங்கல. என்கிட்ட என்ன இருக்கு. நான் அன்னக்காவடி. என் தாத்தா பெரிய வீட்டைக் கட்டி வச்சிட்டு போயிட்டாரு. அவ்வளவுதான். கொஞ்ச காலமா வீட்டை வெள்ளையடிக்கக்கூட என்கிட்ட ரூபாய் இல்ல. கை சுத்தமா இருக்கிறதுனாலதான்.. என்கூட இவ்வளவு பேர் இருக்காங்க. மனசு ரொம்ப நொந்துபோயி.. ராத்திரியெல்லாம் தூங்காம.. அதனாலதான் இதையெல்லாம் பேசுறேன்.


2006 தேர்தலில் என்கிட்ட ரூபாய் கிடையாது. தூத்துக்குடி மாவட்டத்துல இருந்த திருமாவளவனுக்கு போன் பண்ணி, கலிங்கப்பட்டிக்கு வந்துட்டு போங்கன்னு சொன்னேன். கலிங்கப்பட்டிக்கு வந்தாரு. எனக்கே செலவுக்கு பணம் கிடையாது. மாவட்ட செயலாளர் ஆர்.எம்.எஸ். நொந்துபோய் கிடக்காரு. திருமாவளவனை எங்க அப்பா தங்கின ரூமுக்கு கூட்டிட்டு போயி 30 லட்ச ரூபாயை தூக்கிக் கொடுத்தேன். எலெக்ஷன் செலவுக்கு வச்சிக்கங்கன்னு. எலெக்ஷனுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி போன் பண்ணி.. அண்ணே.. பூத் செலவுக்கே இல்லண்ணே.. எல்லாம் காலி ஆயிருச்சு.. ஏதாவது உதவி பண்ணுனாத்தான் முடியும்னு சொன்னாரு.  பத்து பேர்கிட்ட ரெண்டு ரெண்டு லட்சமா கடன் வாங்கி.. 20 லட்ச ரூபாயை 12 மணி நேரத்துல அனுப்பி வச்சேன். இதையெல்லாம் என்னைக்கும் நான் சொன்னது கிடையாது. மனசு நொந்து எரிஞ்சுக்கிட்டிருக்கிறதுனால சொல்லுறேன். வைகோ இந்த தொகுதியில் போட்டி போட்ருவாரோ? நல்லா யூகம் பண்ணுவாங்க பத்திரிக்கைக்காரங்க. ஒருவேளை சாத்தூர்லயே இடைத்தேர்தல்ல நின்னுருவாரோ?


இத பாருய்யா.. 20 தொகுதிலயும் இதே மாதிரிதான் கூட்டம் போடப்போறேன். திமுக தலைமைதான் முடிவு பண்ணும்.  திமுக வேட்பாளரை நிறுத்தினா இதே வேலையை அவங்களுக்கு செஞ்சுட்டு போறோம். அதனால, அந்தக் கணக்கெல்லாம் போட வேண்டாம். நான் தண்ணில தடம் பார்த்திருவேன். காற்றுல தடம் பார்த்திருவேன். என் தடத்தை எவரும் கண்டுபிடிக்க முடியாது.” என்று அனல் கக்கினார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.