Skip to main content

சிஇஓவை எச்சரிக்கும் ஆசிரியர் அமைப்புகள் – 2 ஆயிரம் பேர் திரண்ட ஆர்ப்பாட்டம்!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018
school teachers protest


திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருப்பவர் ஜெயக்குமார், உலக சாதனை நிகழ்ச்சியென ஒரு லட்சம் மாணவர்களை செய்தித்தாள் வாசிக்க வைத்து கட்டுரை எழுத வைத்தது, பெரிய அளவில் திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் புத்தக திருவிழா நடத்தியது, கல்வியில் பின்தங்கிய இந்த மாவட்டத்தை தேர்ச்சி பெற வைக்க முயன்று முன்னுக்கு கொண்டு வந்தது என பாராட்டுக்கள் ஒரு புறம் பெற்றாலும் மற்றொரு புறம் ஆசிரியர் – ஆசிரியைகள் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 

 

 

கடந்த ஜீலை 11ந்தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த ஆசிரியர்கள் திரண்டனர். மை சைல்டு மை கேர் என்கிற திட்டத்தின் கீழ் ரசீது ஏதும்மில்லாமல் பணம் வாங்கி லட்ச கணக்கில் முறைகேடு செய்தது, பருவ தேர்வு விடைத்தாள்களை வாங்கி விற்று பல லட்ச ரூபாய் முறைகேடு செய்ததை அரசு விசாரிக்க வேண்டும், ஆசிரியர்களின் பயோமெட்ரிக் வருகை பதிவு ஆராயும் சிஇஓ ஆப் என்ற செயலியை வன்மையாக கண்டிக்கிறோம், பெண் ஆசிரியைகளை ஒருமையில் பேசுவதை கண்டிக்கிறோம், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கின் நிர்வாக மாறுதலை தடை செய்வதை கண்டிக்கிறோம், விளம்பர பிரியராக உள்ள சி.இ.ஓவை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.
 

 

teachers


இந்த கண்ட ஆர்ப்பாட்டத்துக்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் – ஆசிரியைகள் வருகை புரிந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட இயக்க நிர்வாகிகள், சிஇஓவை கடுமையாக விமர்சித்து பேசினர். சி.இ.ஓ தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் எங்களது போராட்டம் இன்னும் தீவிரமடையும், திருவண்ணாமலை மட்டும்மல்லாமல் தமிழகம் முழுவதும் நடைபெறும் என எச்சரித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .

Next Story

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சிஇஓ நியமனம்!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Kilambakkam Bus Station Appoints CEO

சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைத்திட தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய புறநகர்ப் பேருந்து முனையக் கட்டுமானத்திற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு நிலம் மாற்றப்பட்டு, தொடர்புடைய அனைத்துக் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு 393.74 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. இந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கிளாம்பாக்கம் மற்றும் குந்தம்பாக்கம் பேருந்து நிலையங்களை நிர்வகிக்க, தலைமை நிர்வாக அலுவலரை நியமித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், “சென்னை நில நிர்வாக ஆணையரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வரும் ஜெ. பார்த்திபன், கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து முனையங்களின் தலைமை நிர்வாக அலுவலராக நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.