தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரான நான், எப்படி கமல்ஹாசன் கட்சியில் சேர அப்ளை செய்வேன்? என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு மாவட்ட பா.ஜ.க பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றுது. அதில் கலந்து கொண்ட பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார்,
"இன்றையச் சூழலில் நாகரீகமான அரசியலை, வளர்ச்சி அரசியலை, ஊழலற்ற அரசியலை கொடுக்கும் தகுதியை பா.ஜ.க. பெற்றுள்ளது. புதியவர்கள் அரசியலுக்கு வருவதாகக் கூறுகின்றனர். ஆனால், வருவார்களா எனத் தெரியவில்லை. இவர்களால் மக்களுக்கு எதையும் செய்ய முடியாது.
டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைநிமிர, புதிய கட்சி துவங்கப்போவதாக அறிவித்துள்ளார். சிறையில் இருப்பவர்களின் படத்தை போட்டுவிட்டு, இவர்கள் எப்படி தமிழகத்தை தலை நிமிர வைப்பார்கள் எனத் தெரியவில்லை. தமிழகத்தை தலைநிமிர வைக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
கமல்ஹாசன் கட்சியில் இருந்து என்னை உறுப்பினராக சேர்த்துக் கொண்டுள்ளோம் என எனக்கு தகவல் வருகிறது. இது எப்படி என தெரியவில்லை. நான் அதில் அப்ளை செய்ததாகக் கூறுகின்றனர். தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரான நான், எப்படி அதில் அப்ளை செய்வேன்? அவர்கள் தவறு செய்து விட்டார்கள். அதை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். ஏமாற்று வேலை செய்யக்கூடாது. நாகரீகமற்ற அரசியல் தேவையில்லை. நாங்கள் நேர்மையான அரசியல் நடத்துகிறோம்.
நோட்டு கொடுத்து ஓட்டு வாங்குபவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். தேனி, குரங்கணி காட்டுத் தீ சம்பவம் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையேற்றத்தை தமிழக அரசு வரைமுறைப்படுத்த வேண்டும். பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும். பாஜகவுக்கு எதிராக சோனியா, 20 கட்சிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளார். இனி எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும், பாஜகவின் உறுதித் தன்மையை குலைக்கமுடியாது.
காங்., பாஜக, அல்லாத கூட்டணிக்காக ஸ்டாலினிடம் மம்தா பேசுகிறார். காங்கிரஸ் கூட்டிய கூட்டத்தில் கனிமொழி கலந்து கொள்கிறார். உண்மையில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக உள்ளதா? என்பதை தெரியப்படுத்த வேண்டும் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டது" என்றார்.
நான், எப்படி கமல்ஹாசன் கட்சியில் சேர அப்ளை செய்வேன்? ஏமாற்று வேலை கூடாது..! - தமிழிசை பேட்டி
சார்ந்த செய்திகள்
Next Story
“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்
நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.