Skip to main content

தமிழ்நாட்டில் தொடங்கி இந்தியா வரை விரிந்த கருப்பு கொடியும் ... Go Back Modiயும்.. -அதிர்வில் பா.ஜ.க. தலைமை 

Published on 09/02/2019 | Edited on 09/02/2019

 

go


பிரதமர் நரேந்திர மோடி அரசு தமிழக முன்னேற்றத்திற்கு எந்த வளர்ச்சித் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்பதோடு நீட் தேர்வு கொடுமை, கஜாபுயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் சொல்லாதது என தமிழ் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையாக நடத்துவது என்பதோடு இந்திய அளவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களை வேதனையுற வைத்தது.

 

 கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வாரி வழங்குவது என மத்திய பா.ஜ.க. மோடி அரசு மீது  தமிழக அரசியல் கட்சிகள் மோடி எதிர்ப்பு போராட்டங்களை தமிழ் நாட்டில்  கருப்பு கொடியுடனும் Go Back modi என்ற கோஷத்தோடும் தொடங்கியது. இந்த Go Back Modi உலக அளவில் வைரலாக பரவி முதன்மை இடத்தை பிடித்தது. 

 

தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த கருப்புக்கொடி Go Back Modi போராட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் பரவ தொடங்கி விட்டது. நேற்றும் இன்றும் அஸ்ஸாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்தார்.  அப்போது அஸ்ஸாம் மாணவர் முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் பிரதமர் மோடிக்கு எதிராக Go Back modi என கருப்புக்கொடிகளை காட்டி போராட்டம் நடத்தினார்கள். குறிப்பாக பிரதமர் மோடி சாலை மார்க்கமாக காரில் சென்ற போது மோடி கார் அருகிலேயே கருப்புக்கொடிகளை காட்ட பிரதமர் மோடி போராட்டம் நடத்தியவர்களையும் கருப்புக்கொடிகளையும் பார்த்து சற்றே மிரட்சியுடன் காரில் செல்கிறார்.   இதன் தொடர்ச்சியாக நாளை தேர்தல் பிரச்சாரத்திற்காக ஆந்திரா செல்லும் மோடிக்கு அம்மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேச கட்சி மிக பிரமாண்டமாக கருப்புக்கொடியும் Go Back Modi போராட்டத்தையும் நடத்த தயாராகி வருகிறது. 

 

நாளை காலை ஆந்திரா மாநிலம் விஜயவாடா விமான நிலையம் சென்று அங்கிருந்து தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு காரில் மோடி செல்கிறார். விஜயவாடா விமான நிலையம் முதல் நகர் முழுக்க சாலையோரங்களில் மிகப் பெரிய கருப்புக்கொடிகளும் Go Back modi என்ற பதாகைகளையும் பறக்க விட்டு வருகிறார்கள். ஆந்திராவை தொடர்ந்து மாலை தமிழ்நாட்டில் உள்ள திருப்பூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு திருப்பூரிலும் கருப்புக்கொடி எதிர்ப்பு மற்றும் Go Back Modi என்ற போராட்டத்தை பெரியாரிய உணர்வாளர்கள், தமிழ் அமைப்புகள் நடத்துகிறது. 

 

இதனை தொடர்ந்து சில நாட்களில் கம்யூனிஸ்ட் ஆளும் கேரளா மாநிலத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக மோடி செல்ல திட்டம் உள்ளது. சபரிமலை விவகாரத்தில் மத அடிப்படையில் மக்களிடம் கலகம் ஏற்படுத்திய பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்..அமைப்புகளை கண்டிப்பதோடு இதற்கு உறுதுணையாக இருந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மோடியே கேரளாவுக்கு வராதே திரும்பிப் போ என்று கருப்புக்கொடி போராட்டத்திற்கு இடதுசாரி அமைப்புகள் தயாராகி வருகிறது.   ஆக Go Back modi என்று கருப்புக்கொடி போராட்டம் என்ற நெருப்பை தமிழகம் பற்ற வைக்க இன்று இந்தியா முழுக்க தமிழகத்தின்  நெருப்பு பொறி பறந்து பிரதமர் மோடிக்கெதிராக எதிர்ப்பலைகள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பற்றி பரவ தொடங்கி விட்டது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேங்காய் சிரட்டை மாலையுடன் போராடிய தேமுதிக

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

dmdk who fought wearing a garland of coconuts

 

கஜா புயல் புரட்டிப்போட்ட பிறகு தமிழக விவசாயிகளால் இன்னும் எழ முடியவில்லை. இதனால் ஒட்டுமொத்த விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது.

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரதான விவசாயம் தென்னை. அதைச் சார்ந்து தென்னையிலிருந்து உப பொருட்களை தயாரிக்கும் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் வணிகமும் நடந்தது. கஜா புயலுக்கு தென்னை மரங்கள் அழிந்ததோடு, அதனைச் சார்ந்த தொழில்களும் நலிவடைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.

 

இதனால் தேங்காய் விலையும் வீழ்ச்சியடைந்து, தென்னை விவசாயிகள் மேலும் மேலும் கடனாளிகளாகி வருகின்றனர். இந்நிலையில், தேங்காய் விலையை உயர்த்த வேண்டும். அரசே தேங்காய் கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் ஆங்காங்கே தேங்காய் உடைப்பு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளத்தில், மாவட்ட தேமுதிக சார்பில் நடந்த தேங்காய் உடைப்பு போராட்டத்தை மாவட்டச் செயலாளர் மன்மதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தேங்காய் சிரட்டைகளை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டு கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Next Story

புதிய மின் பாதைக்காக அழிக்கப்பட உள்ள சாலையோர மரங்கள்... போராடத் தயாராகும் சமூக ஆர்வலர்கள்!

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Roadside trees to be cleared for new power line ... Community activists ready to fight!

 

மின்பாதைகள் அமைப்பதற்காக சாலை ஓரங்களில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தமிழகத்தில் கஜா புயல் தாக்கத்தால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல கோடி மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதில் சாலையோரத்தில் நின்ற பலநூறு வருட மரங்களும் அடக்கம்.

 

இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கிரீன் நீடா, கைஃபா, மரம் அறக்கட்டளை உள்ளபட ஏராளமான தன்னார்வ அமைப்புகள் சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

 

tree

 

மற்றொரு பக்கம் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். தற்போதுகூட சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் காலநிலை மாற்றங்களை சமாளிக்கவும் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குருங்காடுகள் உருவாக்கும் திட்டங்களை அமைச்சர் மெய்யநாதன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் எந்த ஒரு விழா என்றாலும் மரக்கன்றுகள் நடுவதும் மரக்கன்றுகள் வழங்குவதும் நடந்து வருகிறது. இப்படியான நிலையில்தான் சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ள மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துறை பல மரங்களை அகற்றுவது மட்டுமின்றி புதிய மின்பாதைகள் அமைப்பதாக கூறி மரங்களையும் அகற்றி வருகின்றனர்.

 

இதனால் சாலைப் பணியாளர்களின பல வருட உழைப்பு வீணாகிறது. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி சாலை ஓரங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு செய்து வரும் நிலையில் தற்போது மரக்கன்றுகளுக்கு மேலே மின்பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கன்றுகள் வளரும்போது மின்கம்பிகளில் உரசும் என்பதால் அந்த மரக்குழந்தைகளை வெட்டி அகற்றவும் உள்ளனர்.

 

சில மின்கம்பங்களுக்காக பல நூறு மரக்குழந்தைகளை அழிப்பதை விட 10 தூரம் சில மின் கம்பங்களை மாற்றி நட்டால் போதும் மரங்கள் பாதுகாப்பாக வளரும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளுக்கு நிழலாகவும் இருக்கும் என்று கூறும் சமூக ஆர்வலர்கள் மின்கம்பங்களை மாற்றி நடாமல் மரக்கன்றுகளை அகற்ற முயன்றால் போராடவும் தயாராக உள்ளோம் என்கிறார்கள்.