Skip to main content

ஆர்டிக்கிள் 356ன்படி ஆட்சியை கலைக்க முடியுமா???

Published on 26/05/2018 | Edited on 28/05/2018

இன்றைக்கு நடக்கும் அதிமுக ஆட்சியை அனைத்து தரப்பு மக்களும் வெறுக்க தொடங்கிவிட்டனர். அதை மேன்மேலும் அதிகரிப்பதாகவே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அரசு நடந்துகொண்டது. இந்த சமயத்தில் மிக அதிகமாக பரவியது ஆர்டிக்கிள்356ன்படி இந்த அரசை புறக்கணியுங்கள், ஆர்டிக்கிள் 356ன்படி பதவி விலக்குங்கள் என்பது போன்ற மீம்கள். உண்மையிலேயே ஆர்டிகல் 356ன்படி ஆட்சியை கலைக்க முடியுமா???

 

article 356


ஆர்டிக்கிள் 356 மாநில அரசின் செயல்பாடுகள் சரியில்லை, சட்ட ஒழுங்கு, நிர்வாகமின்மை, மாநில அரசின் கட்டுக்குளில்லாமை, விதிமுறைகளை தவறியது போன்ற காரணங்களால் மாநில அரசின் ஆட்சியை கலைத்து ஆளுநரின் ஆட்சியை அமல்படுத்த இச்சட்டம் வழிவகை செய்கிறது. அதன்படி, ஒரு மாநிலத்தை முழுமையாகவோ அல்லது சில துறைகளையோ ஜனாதிபதியின் ஆட்சிக்குகீழ் கொண்டுவரலாம், அப்படி கொண்டுவந்தாலும் கூட நீதிமன்றத்தின் அதிகாரத்திற்குள் மத்திய அரசு தலையிட முடியாது, தலையிடக்கூடாது. நீதித்துறை தனித்தியங்கவே வேண்டும். இச்சட்டம் உருவாக அடிப்படையாக இருந்தது இந்திய அரசியலைமைப்பு சட்டம் 1935 பிரிவு 93.

 

 


இச்சட்டம் ஒரு கட்டுப்பாடுள்ள ஜனநாயகத்தை உருவாக்குவதற்காக கொண்டுவரப்பட்டது என்றாலும்கூட, இச்சட்டம் அமல்படுத்தப்பட்டபோதெல்லாம் இடதுசாரிகளும், எதிர்கட்சிகளும் இந்தியா என்பது ஒரு நாடல்ல அது ஒரு துணைக்கண்டம், மாநிலங்களின் கூட்டமைப்பு இந்த சட்டத்தின் மூலம் மாநில உரிமைகளுக்குள் மத்திய அரசு தலையிடுகிறது என்று எதிர்த்தே வந்தது. அதற்கேற்றாற்போலவே பல நேரங்களில் இச்சட்டங்கள் தவறாகவே பயன்படுத்தப்பட்டது. சர்காரியா கமிஷனின் குறிப்புகளின்படி இச்சட்டம் கொண்டுவரப்பட்ட சில ஆண்டுகளில் மூன்றுமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதன்பின் 1975 மற்றும் 1979 ல் 21 முறையும், 1980 மற்றும் 1987ல் 17 முறையும் இச்சட்டம் மாநில அரசுகளின்மீது பாய்ந்தது. இப்படியெல்லாம் நடந்ததை அடுத்து 1989ம் ஆண்டு உச்சநீதிமன்றம், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்குமுன் அதை நீதித்துறையின் பரிசீலனைக்கு உட்படுத்தலாம் எனக் கூறியது. அப்போது மத்திய அரசு கர்நாடகாவில் நடந்த எஸ்.ஆர். பொம்மையின் ஆட்சியை கலைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


ஒரு காலகட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றாக இல்லாத அனைத்து மாநிலங்களிலும் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டு ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் ஒரே ஆட்சி நடந்தால் தவறு நடந்தாலும் இதை பயன்படுத்தாமலும் இருந்திருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக இருவேறு நிகழ்வுகள் நடைபெற்றன. ஒன்று 1959 கேரளாவில் அப்போதைய முதல்வரான ஈ.எம்.எஸ். நம்பூதிரி சிறப்பான ஆட்சியை நடத்தியும் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இச்சட்டத்தின்படி ஆளுநர் ஆட்சியை நடைமுறைப்படுத்தினார். இன்னொன்று 2002 குஜராத்தில் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திரமோடி மோசமான ஆட்சியை நடத்தியும் அப்போதைய பிரதமரான வாஜ்பாய் தலைமையிலான அரசு மோடியின் ஆட்சியை கலைக்க மறுத்தது.

 

மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாக இருக்கும்வரை இச்சட்டம் பயனற்றதாகவே இருக்கும் என்ன நடந்தாலும்....


 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.