Skip to main content

யார் ஆட்சியில் துப்பாக்கிச்சூடுகள் அதிகம்?

Published on 24/05/2018 | Edited on 24/05/2018

விடுதலை பெற்ற பிறகு தமிழகத்தில் முதன்முதலில் காங்கிரஸ் ஆட்சியில்தான் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்தி மொழியை கட்டாயப்பாடமாக திணிக்க மத்திய அரசு முயற்சி செய்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க அன்றைக்கு உள்துறை அமைச்சராக இருந்த கக்கன் துப்பாக்கிசூடு நடத்த உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகினர்.

 

அதன்பிறகு, 1972 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கோவில்பட்டி பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 3 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

 

1980ஆம் ஆண்டு எம்ஜியார் ஆட்சியில் இலவச மின்சாரம், இலவச உரம் கோரி நாராயணசாமி நாயுடு தலைமையில் தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தை ஒடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் 14 விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு குருஞ்சாக்குளத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 8 விவசாயிகள் உயிரிழந்தனர்.

 

shoot

 

1985 ஆம் ஆண்டு சென்னையில் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக நடத்திய போராட்டத்தை ஒடுக்க மீனவ நண்பனாகவும், படகோட்டியாகவும் நடித்த எம்ஜியார் உத்தரவில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. அதில் 3 மீனவர்களும், பரமக்குடியில் நடைபெற்ற சாதிக்கலவரத்தை ஒடுக்க நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேரும் பலியாகினார்கள்.

 

அருப்புக்கோட்டை அருகே ராட்சத ஆழ்குழாய் கிணறு தோண்டுவதை எதிர்த்து 1987 ஆம் ஆண்டு விவிசாயிகள் நடத்திய போராட்டத்தை அடக்க துப்பாக்கிசூடு நடத்த எம்ஜியார் உத்தரவிட்டார். அதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.

 

1992 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய போரட்டத்தை அடக்க ஜெயலலிதா துப்பாக்கிச் சூடுக்கு உத்தரவிட்டார். அதில் 2 பேர் பலியாகினர். 1994 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் காஞ்சிபுரத்தில் பஞ்சமி நிலத்தை மீட்க தலித் மக்கள் நடத்திய போராட்டத்தை அடக்க துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டார். அதில் 2 பேர் பலியாகினர்.

 

1995 ஆம் ஆண்டில் நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சாதிக்கலவரத்தை அடக்க ஜெயலலிதா உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 2 பேர் பலியாகினர்.

 

1991 ஆம் ஆண்டு பதவியேற்ற ஜெயலலிதா, எம்ஜியாரைப் போலவே தனது ஆட்சிக்காலத்திலும் துப்பாக்கிச் சூடுக்கு மிகச் சாதாரணமாக உத்தரவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

 

1997 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கயத்தாறு, சிவகாசி ஆகிய இடங்களில் போராட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் உயிர்ப்பலி ஏதுமில்லை.

 

1997 ஆம் ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தடையை மீறிய டாக்டர் கிருஷ்ணசாமியை போலீஸார் கைது செய்தனர். இதைக் கண்டித்து நெல்லையில் நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட  மோதலைக் கட்டுப்படுத்த போலீஸ் துப்பாக்கிச் சூடுக்கு உத்தரவிடப்பட்டது. அதில் ஒருவர் பலியானார்.

 

மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர் கூலி உயர்வுகேட்டு நடத்திய போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து நெல்லையில் பேரணி நடத்தப்பட்டது. அப்போது நடந்த கலவரத்தை அடக்க தடியடி நடத்தினார்கள். தடியடியில் தப்பிக்க கலைந்து ஓடியவர்கள் தாமிரபரணி ஆற்றில் குதித்தனர். இதில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாக கூறப்பட்டாலும் அதற்கு ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டது.

 

2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தண்டனைபெற்ற குற்றவாளி என்ற நிலையில் சட்டத்துக்குப் புறம்பாக ஜெயலலிதா இரண்டாம் முறையாக பதவியேற்றார். உடனே திமுக தலைவர் கலைஞரை கைது செய்ய உத்தரவிட்டார். நள்ளிரவில் நடைபெற்ற அந்த கைதை கண்டித்து திமுகவினர் நடத்திய போராட்டத்தை கலைக்க ஜெயலலிதா துப்பாக்கிசூடு நடத்த உத்தரவிட்டார். அதில் 4 திமுகவினர் பலியாகினர்.

 

2011 ஆம் ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்காக சென்றவர்கள் மீது இன்னொரு பிரிவினர் நடத்திய தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர ஜெயலலிதா துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டார். அதில் 7 பேர் பலியாகினர்.

 

2013 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ராமேஸ்வரம் தங்கச்சி மடத்திலும், 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி தேனியில் பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் ஒருவரின் இறுதி ஊர்வலத்திலும், 2016 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி நெல்லை மாவட்டத்தில் காதல் பிரச்சனையால் ஏற்பட்ட மோதலைக் கலைக்கவும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மூன்றுசம்பவங்களும் அதிமுக ஆட்சியில் நடைபெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்போது, 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிகள் 13 சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

மொத்தத்தில் எம்ஜியார், ஜெயலலிதா ஆட்சிகளில்தான் எதற்கெடுத்தாலும் துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டங்கள் ஒடுக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது.

 

 

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.