Skip to main content

நீதிபதியிடம் மனுக் கொடுக்கலாம்… மல்லுக்கட்டவா முடியும்? – தங்கத் தமிழ்செல்வன் பேட்டி

Published on 19/06/2018 | Edited on 19/06/2018

 

Thanga Tamil Selvan


தகுதிநீக்கத்தை எதிர்த்த வழக்கை வாபஸ்பெறுகிறேன் என்று மூன்றாவது நீதிபதியிடம் மனுக்கொடுக்கலாம். அவர் அதை ஏற்க மறுத்தால் அவரோடு மல்லுக்கட்டவா முடியும்? கடவுள் விட்ட வழி என்று போகவேண்டியதுதான் என நக்கீரன் இணையதளத்திடம் தங்கத்தமிழ்செல்வன் கூறினார்.

 

 

 

குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்கிறது என்றும், தினகரனை தவிர்த்து 18 பேரும் வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்றும் ஜெயக்குமார் கூறுகிறார். 18 பேரும் வந்தால் வரவேற்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். மொத்தத்தில் தினகரன் அணியில் மிகப்பெரிய கருத்து மோதல் நிலவுவதாக செய்திகள் உலா வருகிறது. தினகரன் அணியில் என்னதான் நடக்கிறது? 

 

நக்கீரன் இணையதளத்திடம் பகிர்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்:-

 

18 பேரின் தகுதி நீக்க வழக்கில் கோர்ட் பாதகமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இதனை பொதுமக்கள் புரிந்து கொண்டார்கள். 3வது நீதிபதியின் தீர்ப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை. எனது தொகுதியில் எம்எல்ஏ இல்லாமல் இருப்பதால் பல பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. அதனால் எனது வழக்கை வாபஸ் பெறுகிறேன். இடைத்தேர்தல் வந்தால் ஒரு எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தலாம் என்பதற்காகவே வாபஸ் பெறுகிறேன்.

 

இடைத்தேர்தல் வருவதை தினகரன் விரும்புகிறாரா?

 

எதற்காக வாபஸ் வாங்குகிறேன் என்று எனது கருத்தை சொன்னபோது அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.

 

 

 

தினகரன் அணியில் கருத்து வேறுபாடு இருக்கிறதா?

 

எங்கள் அணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எந்த குழப்பமும் இல்லை. தினகரன் சம்மதத்தின் பேரில்தான் வழக்கை வாபஸ் வாங்குகிறேன். வாபஸ் பெறுவதற்கான மனுவை 3வது நீதிபதியிடம் கொடுக்கலாம் என்று சொன்னதே தினகரன்தான்.

 

ஒருவேளை அந்த வாபஸ் கோரிக்கையை கோர்ட் ஏற்கவில்லை என்றால்?

 

நான் என்ன செய்ய முடியும். நான் என் கடமையைத்தான் செய்ய முடியும். கோர்ட்டுக்கிட்ட மல்லுக்கட்டவா முடியும். கடவுள் விட்ட வழி என்று போக வேண்டியதுதான்.

 

உங்கள் மனுவை வாபஸ் பெறுவதற்கு நீதிபதி அனுமதித்தால், 17 பேரும் வழக்கை வாபஸ் பெறுவார்களா?

 

அதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் வழக்கை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

 

 

 

18 பேரும் வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்று ஜெயக்குமாரும், எடப்பாடி பழனிசாமியும் அழைப்பு விடுத்துள்ளார்களே? திவாகரன் அணியினரும் உங்களை புகழ்ந்து பேசுகிறார்களே?

 

அவர்கள் எங்களை ஏற்றுக்கொண்டாலும் தகுதி நீக்கம் தகுதி நீக்கம்தான். ஒருவேளை எங்களை சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்ல வைக்கலாம் என்று கனவு காணலாம். நாங்கள் 18 பேரும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கோம். ஒன்பது மாதம் நாங்கள் அவ்வளவு கஷ்டப்பட்டோம். எடப்பாடி பழனிசாமி பக்கம் போக மாட்டோம். திவாகரனுக்கு இதில் சம்மந்தமே கிடையாது.

 

18 பேரை இழுக்க பண பேரம் நடப்பதாக கூறப்படுகிறதே?

 

அதெல்லாம் தவறான செய்திகள். அந்த மாதிரி எதுவும் கிடையாது.

சார்ந்த செய்திகள்

Next Story

தேனியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Chief Minister MK Stalin campaign In Theni

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தேனி பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் இன்று (10.04.2024) மாலை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் தேனி மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனும், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தமும் போட்டியிடுகின்றனர்.

இத்தகைய சூழலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தேனியில் நடைப் பயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்குள்ள உழவர் சந்தை பகுதியில் நடந்து சென்று வியாபாரிகளையும், வணிகர்களையும், பொதுமக்களையும் சந்தித்து தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். மேலும் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது அவருடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக நிர்வாகிகள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

“ஒரு சீட்டை டி.டி.வி.தினகரன் காலில் விழுந்து பெற்றிருக்கிறார்” - தங்க தமிழ்ச்செல்வன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thanga tamilselvan was severely criticized by T.D.V.Thinakaran

திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக தேனி நேரு சிலை மும்முனை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக திறந்த ஜீப்பில் வந்தார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி  மூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் அமைச்சர்கள் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது, “முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை பலப்படுத்தி ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படும். திண்டுக்கல் - சபரிமலை ரயில் திட்டம் கொண்டு வரப்படும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேனி, உசிலம்பட்டி, போடி ஆகிய  பகுதியில் புறவழிச்சாலைகள் புதிதாக அமைக்கப்படும்.

டிடிவி தினகரன் வனவாசம் சென்று வந்தது போல உள்ளது. மீண்டும் தேனி வந்தது என்று கூறுகிறாரே என்ற கேள்விக்கு ? அவர் அப்படியே சென்று இருக்கலாம் .தேர்தல் என்பது மக்களோடு மக்களாக களத்தில் இருந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்திருக்க வேண்டும். 14 வருடம் வன வாசம் சென்று மீண்டும் வந்திருப்பதாக கூறும் டிடிவி தினகரன், அப்படியே சென்றிருக்க வேண்டியது தானே, ஏன் மீண்டும் வந்தார்? பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன், ஒரு சீட்டை காலில் விழுந்து பெற்று இருக்கிறார்.

செல்வாக்கை நிரூபிக்க ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தனித்து சுயேட்சையாக போட்டியிட வேண்டும். இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார் என்று டிடிவி.தினகரன் கேட்கிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியா கூட்டணி வெற்றி பெறும் அதன் பின்னர் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இதைப்பற்றி தினகரன் கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார்.