Skip to main content

படிக்காதவன் சோறு போடுகிறான்; படித்தவன் நாட்டை கூறு போடுகிறான் - சீமான் பேச்சு!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

ik



சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடப்பு அரசியல் தொடர்பாக பேசினார். அவர் பேசியதாவது "கடந்த 50 ஆண்டுகளாக ஓட்டை மாற்றி மாற்றி போட்டு இந்த தமிழகம் பாழ்ப்பட்டு போய் கிடக்கிறது. அதிமுக, திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மாற்றி வாக்களிக்க வேண்டும் என்றாலும் பழக்க தோஷம் அவர்களை விடுவதில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு அம்மா கன்னியாகுமரியில் இருந்து என்னிடம் தொலைபேசியில் பேசினார். "அப்பா, உனக்குதான் வாக்களிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எதற்கு ஒரு வாக்கை வீணடிக்க வேண்டும் என்று இலைக்குப் போட்டுவிட்டேன்" என்று கூறினார்கள். தான் செய்தது தவறு என்பதை அவர்களுக்கு காலம் புரிய வைக்கும். மாறி மாறி இந்த தமிழகத்தை திமுக, அதிமுக சீரழித்து வருகிறார்கள். இன்னமும் அது தொடர வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆண்ட பெருந்தலைவர் காமராஜர் செய்த சாதனைகளை, இத்தனை ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட அதிமுக, திமுக கட்சிகள் செய்யவில்லை. கிட்டதட்ட 40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி மடை மாற்றம் செய்து வருகிறார்கள். இலவசம் தருவதாகக் கூறி மதி மயக்குகிறார்கள். 

 

இவர்கள் பல துணைகளைக் கட்டினார்களே தவிர, ஒரு அணையைக் கூட கட்டவில்லை. ஒரு துணையும் கட்டாத அவர், பல அணைகளைக் கட்டி நாட்டை வளமாக்கினார். ராஜாஜி நிதியில்லை என்று கூறி மூடிய 6000 பள்ளிகளைத் திறந்ததோடு, மேலும் 16 ஆயிரம் பள்ளிகளைத் திறந்து குழந்தைகளுக்கு கல்வியைப் போதித்தவர் படிக்காத மாமேதை காமராஜர். அவரின் சாதனைகளை யாராவது மறந்துவிட முடியுமா, இல்லை மறுத்து பேசிவிட முடியுமா?  நமக்கு இரண்டு கண் போனாலும், அவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்பதுதான் மானுட சிந்தனை. அப்படித்தான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் நாங்கள் எப்படி நினைக்கவில்லை. எங்கள் தலைவர் அப்படி நினைக்கவில்லை. எங்களை உருவாக்கிய மேதகு பிரபாகரன் அப்படி நினைக்கவில்லை, எங்களை அவ்வாறு உருவாக்கவும் இல்லை. அவர் என்ன நினைத்தார், நான் வீழ்ந்தாலும் சரி, என் இனம் எழ வேண்டும் என்று விரும்பினார். அதே கோட்பாட்டில் அவருடைய பிள்ளைகள் நாங்களும் இருக்கின்றோம். 

 

பெருந்தலைவர் படிக்கவில்லை, படிக்க விடவில்லை. ஆனால் தனக்கு கிடைக்காத கல்வி யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று அவர் எண்ணவில்லை. தனக்கு கிடைக்காத கல்வி தன் தேசத்தில் உள்ள பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். படிக்க வைத்தால் நம் பிள்ளைகள் நாட்டை முன்னேற்றிவிடுவார்கள் என்று அவர் நம்பினார். ஆனால் தற்போது இருப்பவர்கள் எல்லாம் படித்தும், கொள்ளை அடிப்பது எப்படி என்று சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள். படிக்காதவன் நாட்டுக்கு சோறு போடுகிறான், படித்தவர்கள் நாட்டை கூறுபோடுகிறார்கள். ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை என்றால் துள்ளிக் குதிக்கிறார்கள். எப்படி ஆடு மாடு மேய்க்கச் சொல்கிறீர்கள் என்று. எல்லாரும் கலெக்டராக ஆக முடியும். கலெக்டருக்கும் நாமதான் கஞ்சி ஊத்த வேண்டும். நாட்டின் பிரதமர் ஆனாலும், இல்லை அமெரிக்க அதிபர் ஆனாலும், கஞ்சி விவசாயிதான் தர முடியும். பல பேர், சீமானுக்கு வாக்களித்தால் பிஜேபி வந்துவிடும் என்கிறார்கள். எனக்கு வாக்களித்தால் பிஜேபி எப்படி வரும். நான்தான் வெற்றிபெறுவேன். எனவே வெற்றிக்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம்" என்றார். 

 

 

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.

Next Story

நா.த.க. சின்னம் தொடர்பான விவகாரம்; தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Election Commission action for NtK party symbols related issue

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது நாம் தமிழர் கட்சியினரிடயே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டது.

Election Commission action for NtK party symbols related issue

இதனையடுத்து நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கபட்ட மைக் சின்னத்திற்கு பதில் வேறு ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தீப்பெட்டி, கப்பல், படகு, பாய் மரப்படகு அல்லது விவசாயம் சார்ந்த சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மைக் சின்னத்திற்கு பதில் வேறு சின்னம் கேட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.