Skip to main content

கடைக்காரர் அவரிடம் ரூ 10 கொடுங்கள் என்று வாங்கி... -நெகிழியை புறக்கணிக்கும் பொதுமக்கள்

Published on 02/01/2019 | Edited on 02/01/2019
plastic ban

 

தமிழக அரசு ஜனவரி முதல் நெகிழிகளுக்கு தடைவிதித்து சட்டம் இயற்றியுள்ளது. இதனை சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொதுமக்களும் வரவேற்றுள்ளனர். பொதுமக்கள் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்க பை எடுத்து வருகிறார்களா? என்பதை அறிய ஜன 1-ந்தேதி சிதம்பரம் காய்கறி மார்கெட்டிற்கு காலையிலேயே சென்றோம். அப்போது மார்கெட்டுக்கு வருபவர்கள் கையில் ஒரு துணி பை எடுத்து வந்து காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கியதை பார்க்க முடிந்தது. 
 

அப்போது காய்கறி கடையில் ஒருவர் உருளை கிழங்கு, தக்காளி வேண்டும் என்ன விலை என்று கடைக்காரரிடம் கேட்டார், அப்போது கடைக்காரர் பை இருக்கா என்று கேட்டபோது எப்போதும் போல வந்துட்டேன், நாளையிலிருந்து  எடுத்து வருகிறேன் என்றார் அவர். உடனே கடைக்காரர் அவரிடம் ரூ 10 கொடுங்கள் என்று வாங்கி கொஞ்சம் பக்கத்திலுள்ள கடைக்கு ஒரு நபரை அனுப்பி துணிப்பையை வாங்கி வரச்சொல்லி அதில் அவர் கேட்ட காய்கறிகளை கொடுத்தார். கடைக்காரரோ நாளை, நாளை என்றால் அது போய் கொண்டுதான் இருக்கும். இன்று பணம் கொடுத்து பையை வாங்கி விட்டீர்கள் என்றால் கடைக்கு என்றதும், பையை எடுத்துப்போக வேண்டும் என்ற நினைப்பு வந்துவிடும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
 

அதேபோல் மார்கெட்டுக்கு பை எடுத்து வந்து காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்குபவர்களோ நெகிழியை ஒழிக்க அரசு சட்டம் போட்டதிலிருந்து பை எடுத்து வர ஆரம்பித்து விட்டேன் சில நேரங்களில் பை இல்லாதபோது நெகிழியிலும் வாங்கி சென்றுள்ளேன். ஜனவரி முதல் ஒரு துணிபையை எடுத்து எனது இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டேன் என்றார்.
 

மார்கெட்டிற்கு அடுத்த தெருவிலுள்ள ஓட்டலுக்கு பெண் ஒருவர் இட்லி வாங்க காலையிலே வந்தார். அவர் சாம்பார் வாங்க பாத்திரம் எடுத்து வாராததால் கடைக்காரர் சாம்பாரை நெகிழியில் கட்டிகொடுக்காமல் இட்லி கட்டிய பொட்டலத்தில் சட்னியை மட்டும் வைத்து கட்டிகொடுத்து இனி வரும்போது சாம்பார் வாங்க சரியான பாத்திரம் எடுத்து வரவேண்டும். தற்போது நான் சமாளித்து சாம்பாரை கட்டிகொடுத்துவிட்டால் உங்களுக்கு பாத்திரம் எடுத்துவரவேண்டும் என்ற எண்ணம் தோன்றாது என்று  அறிவுறுத்தி அனுப்பினார்.
 

நெகிழி குறித்து பொதுமக்களிடமும், வணிகர்களிடமும் அரசு இன்னும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 

 

 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.