Skip to main content

நித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

"தலைமறைவு குற்றவாளியாகிவிட்டார் நித்தியானந்தா. "கைலாசா' என்கிற நாட்டை உருவாக்கி, ரஞ்சிதாவை பிரதமராக அறிவித்த நித்தியானந்தா, தற்பொழுது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை' என்கின்றன உலக நாடுகள். "பருத்தி வீரன்' படத்தில் டீ கடையில் வேலை செய்யும் கஞ்சாகருப்புவை அந்தக் கடையின் ஓனர் எனச் சொல்லிவிட்டு, கடைசியில் "அவன் ஓனர் இல்லையா... பயபுள்ள பொய் சொல்லிட்டான்' என கார்த்தியும் சரவணனும் கலாய்ப்பார்கள். அதேபோல் இணைய மொழிகளில் உண்மையைப் போன்ற ஒரு வடிவம் என்கிற சொற்றொடர் வரும்... அதுதான் நித்தியின் கைலாசா நாட்டு அறிவிப்பிலும் வந்திருக்கிறது என்கிறார்கள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள்.

 

nithy



நித்தி மீது லெனின்கருப்பன் 2010-ஆம் ஆண்டு கொடுத்த கற்பழிப்பு புகார், வழக்காக மாறி முழு விசாரணைக்கு வந்துள்ளது. ஆர்த்தி ராவ், வினய் பரத்வாஜ் ஆகியோர் அசைத்துப் பார்க்க முடியாத சாட்சிகளாக உள்ள இந்த வழக்கில் லெனின் கருப்பன் தனது சாட்சியங்களை பதிவுசெய்து வருகிறார். பொதுவாக புகார் சொன்னவர், சாட்சியமளிக்கும்போது குற்றம்சாட்டப்பட்டவர் கோர்ட்டில் இருக்கவேண்டும். ஆனால் அந்த வழக்கு "பொது விசாரணை' எனப்படும் ட்ரையலுக்கு வந்து 43 விசாரணை நாட்கள் கடந்துவிட்டன. பொது விசாரணைக்கு வரவே ஒன்பது வருடங்கள், பல வழக்குகள் என போட்டு இழுத்தடித்த நித்தி... இந்த வழக்கு ட்ரையலுக்கு வந்தவுடன் தலைமறைவாகி விட்டார்.
 

nithy



ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்தப் பாலியல் குற்ற வழக்கில் "43 முறையும் நித்தி ஆஜராகாமல் இருக்க மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார். அதில் ஒருமுறை கூட "நான் ஈக்வடார் நாட்டுக்கு பக்கத்தில் உள்ள கைலாசா எனப்படும் தீவில் இருக்கிறேன்' என கோர்ட்டில் சொல்லவில்லை. மாறாக "இமயமலையில் இருக்கிறேன், வரமுடியவில்லை' என்றே குறிப்பிட்டிருந்தார். தற்பொழுது "கைலாசா என்கிற நாட்டை உருவாக்கிவிட்டேன்' என அறிவித்துள்ள நித்தி, இனி இமயமலை முகவரியை இருப்பிட முகவரியாக குறிப்பிட முடியாது. எனவே அவர் ஏகப்பட்ட சிக்கலில் மாட்டிக்கொள்வார்'' என்கிறார்கள் நித்திக்கு நெருக்கமானவர்கள்.
 

nithy



இதற்கிடையே குஜராத் மாநில உயர்நீதிமன்றம், "சிறுமி கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட நித்தியின் சிஷ்யைகளை ஜாமீனில் விடமுடியாது' என அறிவித்துள்ளது. "முக்கிய குற்றவாளியான நித்தியே கைதாகவில்லை. நித்தி வராமல் சிஷ்யைகளை சிறையிலிருந்து அனுப்ப முடியாது' என தெள்ளத் தெளிவாக அறிவித்துவிட்டது. "நித்தியின் பிடியிலிருக்கும் தனது பெண்களை மீட்டுத்தாருங்கள் என தொடரப்பட்ட வழக்கில், அவரது மகள்களை கோர்ட்டுக்கு கொண்டு வாருங்கள்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நித்தி எங்கிருக்கிறார் என கண்டுபிடித்து ஜனார்த்தன சர்மாவின் மகள்களை மீட்டுவாருங்கள் என ஏற்கனவே கடுமையான உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை ஏற்ற குஜராத் போலீஸ் பெங்களூரு பிடதியிலுள்ள ஆசிரமத்தை ரெய்டு செய்தது.
 

nithy



"நித்தி எங்கிருக்கிறார் என குஜராத் போலீஸ் நிச்சயம் கோர்ட்டில் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. "நித்தி கைலாசாவில் இருக்கிறார்' என கோர்ட்டில் குஜராத் போலீஸ் சொன்னால், "அவரை இழுத்து வாருங்கள்' என கோர்ட் உத்தரவிடும். இரண்டாவது முறை போடப்படும் இந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குஜராத் போலீஸ் அனுப்பி வைக்கும். உலகத்தின் எந்த மூலையில் நித்தி இருந்தாலும், அவரைப் பிடிக்க வேண்டும் என சிவப்பு எச்சரிக்கையை மத்திய அரசு பிறப்பிக்கும். உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் அவரை கைது செய்ய சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு கோரும்'' என்கிறது குஜராத் மாநில காவல்துறை வட்டாரம்.


"இந்தியாவில் பாஸ்போர்ட் முடக்கப்பட்ட நித்தி, எங்கள் நாட்டிற்கு வந்தார்' என ஈக்வடார் நாடு அறிவித்துள்ளது. "அவர் பாஸ்போர்ட் இல்லாமல் வந்தார். அகதியாக தங்க அனுமதி கேட்டார். நாங்கள் அனுமதிக்க மறுத்துவிட்டோம். அவர் சென்றுவிட்டார். ஈக்வடார் நாட்டில் தீவு உட்பட எதையும் அவர் வாங்கவில்லை. ஈக்வடார் நாட்டில் ஒரு தீவு வாங்கி கைலாசா என்கிற நாட்டை நித்தி உருவாக்கியதாக இணையதளங்களில் வரும் செய்தி பொய்' என அறிவித்துள்ளது ஈக்வடார் அரசு.

கெட்டிக்காரன் பொய் எட்டுநாளில் வெளிவந்துவிட்டது. இப்போது நித்தி, தனது கைலாசா நாடு என்கிற தீவு ஈக்வடாருக்கும் பிரேசிலுக்கும் சொந்தமானது என புதிதாக பிரேசிலை இணைத்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து பிரேசிலிடம் "நித்தி அங்கிருக்கிறாரா?' என இந்திய அரசு கேட்டுள்ளது. "நித்தி ஒரு தீவு வாங்கியுள்ளார் என்பது உண்மை. அதை வைத்து ஐ.நா. சபையிடம் இந்தியாவுக்கு எதிராக கோரிக்கை வைத்ததும் உண்மை. அதை ஒரு நாடாக அறிவித்துக்கொண்டது நித்தி சொன்ன பச்சைப் பொய். அப்படி ஒரு நாடு இல்லவே இல்லை; இருக்கவும் முடியாது. நாடு என நித்தி அறிவிப்பதும் அதை அவரது தரப்பினர் நம்புவதும் வடிகட்டிய முட்டாள்தனம்' என்கிறார்கள் வெளியுறவுத்துறை அதிகாரிகள்.


ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகள் தனக்கு எதிராக சதி செய்வதாக நித்தி குற்றஞ்சாட்டுவதும், தன்னைத்தானே "பரமசிவன்' எனக் கூறிக்கொள்வதும் பா.ஜ.க. மேலிடத்திற்கு கொதிப்பை உண்டாக்கியுள்ளது. இதனிடையே, கர்நாடக பா.ஜ.க. அரசு நித்தி மீதான வழக்குகளை விரைவுபடுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. "சட்டரீதியாக நித்தியை அம்பலப்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு கொடுத்த பிரஷரால்தான் கர்நாடக அரசு வேகம் காட்டுகிறது'' என்கிறார்கள் உள்துறை வட்டாரத்தினர்.

இந்நிலையில்... லெனின்கருப்பன் தாக்கல் செய்த வழக்கில், வருகிற 12-ஆம் தேதிக்குள் நித்தி எங்கே என கண்டுபிடித்துச் சொல்லுமாறு ஏற்கனவே குஜராத் கோர்ட் உத்தரவிட்டதைப் போல, கர்நாடக அரசின் அனைத்து துறைகளுக்கும் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. "அடிமேல் அடிவாங்கி இறுதிக்கட்டமாக சிறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் மகா டுபாக்கூரான நித்தி' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.


 

 

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.