Skip to main content

நமது ரகசியங்களை  திமுகவிடம் சொல்ல மாட்டார்  என்பதற்கு என்ன கேரண்டி?’’-எடப்பாடியிடம் மோதும் அமைச்சர்கள்...

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

 

dmk party and admk party ministers i pac team


கரோனா நெருக்கடியை கடந்து அரசியலில் ஜெயிக்கப் போவது யார்? மருமகனா? மகனா? மகளா? என தமிழக அரசியலில் சத்தமில்லாமல் நடக்கும் போட்டியை மூன்று வாரங்களுக்கு முன்பு விரிவாக நமது இணையத்தளத்தில் பதிவு செய்திருந்தோம். அதில், முதல்வர் எடப்பாடியின் மகன் மிதுன் தலைமையில் அதிமுகவின் தேர்தல் வியூகம் வகுப்பாளராக செயல்பட திமுகவின் முன்னால் ஆலோசகர் சுனில் காய்களை நகர்த்தி வருகிறார் என சுட்டிக்காட்டியிருந்தோம். அந்த வகையில், அதிமுகவின் தேர்தல் வியூக வல்லுநராக சுனில் நியமிக்கப்படும் ஒப்பந்தம் தற்போது சத்தமில்லாமல் அரங்கேறியிருக்கிறது என்கிறார்கள் அதிமுகவினர்.   


திமுகவுடன் பி.கே. அக்ரிமெண்ட் போடுவதற்கு முன்பு, அதிமுகவிடம் அக்ரிமெண்ட் போடுவதற்கே அவர் முயற்சித்தார். ஆனால், தமிழகத்தில் அவருடைய முதல் முயற்சியே தோல்வியடைந்தது. அதாவது, தேர்தல் வெற்றிக்காக அதிமுகவுக்கு தேர்தல் வியூக வல்லுநர் குழுவை உருவாக்கலாமா? என கட்சின் மூத்த தலைவர்களிடம், கடந்த வருடம் இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் ஆலோசனை நடத்தியபோது, ‘’ அத்தகைய கம்பெனிகள் எதுவும் நமக்கு தேவையில்லை. வடநாட்டு கார்பரேட் அரசியல் தமிழகத்தில் எடுபடாது என அதிமுக சீனியர்கள் வலியுறுத்தியதால்தான் பி.கே.வின் முயற்சி அதிமுகவில் பலிக்கவில்லை.

அதன்பிறகே திமுகவை கையிலெடுத்தார். திமுகவும் பி.கே.வை வளைத்துக்கொண்டது. அதனால், திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார் சுனில். அதிமுகவுக்கு பணி செய்ய முயற்சித்த போதும் சுனிலுக்கு அதிமுகவில் பெர்த் கிடைக்கவில்லை. இருப்பினும் தனது முயற்சியை சுனில் கைவிடவில்லை. இந்த சூழலில், எடப்பாடியின் மகன் மிதுனின் நட்பை வளர்த்துக்கொண்ட சுனில், கடந்த 6 மாதங்களாக அதனை கெட்டியாக பிடித்துக் கொண்டதுடன் மிதுனின் மூலமாக எடப்பாடியின் மனதை கரைக்கும் வேலையில் இறங்கினார்.   

முதல் கட்டமாக, சோசியல் மீடியாக்களில் எடப்பாடியின் இமேஜை உயர்த்திக் காட்டும் நடவடிக்கையில் இறங்கினார் சுனில். மிதுனும் சுனிலும் இணைந்து நடத்திய அந்த முயற்சி, எடப்பாடியை மிகவும் கவர்ந்தது. இந்த நிலையில்தான், மூத்த அமைச்சர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதிமுகவிற்கான அரசியல் வியூக வகுப்பாளர் என்கிற ஒப்பந்தத்தை சுனிலுடன் போட்டுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. திமுகவின் வெற்றிக்காக இயங்கும் ஐ-பேக் நிறுவனம் பி.கே. தலைமையில் இயங்கினாலும் பி.கே.வுக்கு பாஸ் சபரீசன்தான். அதேபோல, அதிமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக சுனில் நியமிக்கப்பட்டிருந்தாலும், இவருக்கு பாஸ் மிதுன்தான். அதாவது, எடப்பாடியின் மகன் மிதுன் தலைமையிலேயே சுனில் இயங்குவார். 

 

 


இந்த ஒப்பந்தம் தொடர்பாக, அதிமுகவின் மூத்த அமைச்சர்களுக்கும் எடப்பாடிக்கும் இடையே  மோதல் வெடித்திருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய அதிமுக சீனியர்கள்,‘’திமுகவின் அரசியல் ஆலோசகராக வேலைப்பார்த்த சுனில் ஒரு ராசி இல்லாதவர். திமுகவை ஆட்சியில் அமர்த்த அவர் போட்ட எந்த திட்டமும் வொர்க் அவுட் ஆகவில்லை. அதனால்தான் அவரை திமுக வெளியேற்றியது. அவரே வெளியேறுவதற்கான சூழலையும் உருவாக்கியது. அப்படிப்பட்டவரை, அதிமுகவுக்கு கொண்டு வர வேண்டுமா? திமுகவின் ரகசியங்களை தெரிந்தவர் என்பதற்காக அவரை பயன்படுத்த நீங்கள் நினைத்தால் , நாளைக்கு நமது ரகசியங்களை திமுகவுக்கு சொல்ல மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதனால், சுனில் நமக்கு வேண்டாம். தேர்தல் ஆலோசகர் என்கிற கம்பெனியே நமக்குத் தேவையில்லை என எடப்பாடிக்கு எதிராக மல்லுக்கட்டியிருக்கிறார்கள். 

இதற்கு எடப்பாடி சில விளக்கங்களை தர, அதனை மூத்த அமைச்சர்கள் ஏற்க மறுத்திருக்கிறார்கள். இதனால் இரு தரப்பிலும் தற்போது மன கசப்பு அதிகரித்துள்ளது’’ என்கிறார்கள் அதிமுகவின் சீனியர்கள்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.