Skip to main content

“கடினமான நேரங்கள் வலிமையான மனிதர்களை உருவாக்குகின்றன”- யுவன் 

Published on 08/08/2024 | Edited on 08/08/2024
yuvan about vinesh phogat issue

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரிஸ்டைல் பிரிவில் இந்தியா சார்பில் களமிறங்கிய வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் என்பவருடன் மோதி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருந்தார். ஆனால் தற்போது, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது உடல் எடை 100 கிராம் அதிகமாக இருப்பதாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் இந்தியாவில் பேரதிர்ச்சியை எழுப்பியது. அவர் தகுதி நீக்கத்திற்கு முன்பாக உடல் எடையைக் குறைக்க கடும் உடற்பயிற்சியை மேற்கொண்டதின் காரணமாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு மயங்கியுள்ளார். இதையடுத்து தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று தனது எக்ஸ் பக்கத்தில்   "என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, உங்களின் கனவு, எனது தன்னம்பிக்கை அனைத்தும் இன்று உடைந்துவிட்டது. 2001-2024 ஒலிம்பிக் போட்டிக்கு குட் பை, எனக்கு இதற்குமேல் வலிமை இல்லை" என வினேஷ் போகத் உருக்கமாக பதிவிட்டு தனது ஓய்வை அறிவித்தார். 

விக்னேஷ் போகத் விவகாரம் இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபல நடிகர்கள், சக ஒலிம்பிக் போட்டியாளர் எனப் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். அந்த வகையில் மோகன் லால், மகேஷ்  பாபு, பிரகாஷ் ராஜ், சமந்தா, டாப்சி, நயன்தாரா, ரித்திகா சிங், கரீனா கபூர், விக்கி கௌஷல், ப்ரீத்தி ஜிந்தா, உள்ளிட்ட பல நடிகர்கள் ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில்,  “வினேஷ் வென்றார்... மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளார். கடினமான நேரங்கள் வலிமையான மனிதர்களை உருவாக்குகின்றன. நீங்கள் தனியாக இல்லை... எது வந்தாலும் நாங்கள் அனைவரும் உங்களுடன் நிற்கிறோம் வலுவாக இருங்கள்” என்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்