Skip to main content

மூன்று படக்குழுவுக்கு சம்பளம் கொடுத்து உதவிய விஷ்ணு விஷால்!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020
vishnu vishal


உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

 
வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பல துறைகள் முடங்கியிருப்பதைப் போல சினிமா துறையும் முடங்கியுள்ளது. அதனால் அத்துறையில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியைச் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் அடுத்து எஃப்.ஐ.ஆர், மோகன்தாஸ் மற்றும் தலைப்பிடாத வெறொரு படத்தில் நடித்து வந்தார். இந்த படங்களின் ஷூட்டிங், இறுதிக்கட்ட பணிகள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது. இருந்தபோதிலும் இந்த மூன்று படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் சம்பளத்தை வழங்கி உதவியுள்ளார் விஷ்ணு விஷால். 

 

 

 

சார்ந்த செய்திகள்