Skip to main content

விஷால் வெளியிட்ட வீடியோ... கேள்வி எழுப்பிய ராதிகா...

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் நாசர் தலைமையில் போட்டியிட்ட பாண்டவர் அணி இந்த தேர்தலிலும் போட்டியிடுகிறது.
 

radhika

 

 

இவர்களை எதிர்த்து பாக்யராஜ் தலமையில் ஐஷரி கணேஷ், பிரசாந்த், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகர்கள் சுவாமி ஷங்கரதாஸ் அணி என்ற பெயரில் போட்டியிடுகின்றனர். இந்த இரு அணிகளும் கடுமையான போட்டியுடன் மோதுகின்றனர்.
 

இந்நிலையில் பாண்டவர் அணி சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வீடியோ ஒன்றை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பாண்டவர் அணி எதற்காக தேர்தலில் போட்டியிட்டது. சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் பதவியை துஷ்பிரயோகம் செய்தனர். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம் என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. இந்த வீடியோவை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.
 

இதற்கு நடிகை வரலக்‌ஷ்மி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.  இந்நிலையில் நடிகை ராதிகாவும் விஷாலுக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து கேள்வியும் எழுப்பியுள்ளார். “சரத்குமார் மீது கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபித்து இருக்கிறீர்களா? ஆயிரம் அழுக்கு மூட்டைகளை முதுகில் வைத்துக் கொண்டு சரத்குமார் பற்றி பேசலாமா? பிரிவினை பேசுவது நடிகர் சங்கத்தை ஒற்றுமைப்படுத்தாது” என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்