Skip to main content

'எனக்கு சிலர் துரோகிகளாக மாறிவிட்டனர்' - சியான் விக்ரம் குமுறல் 

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
vikram

 

சீயான் விக்ரம் மகன் துருவ் தற்போது 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'வர்மா' படத்தில் நடித்துள்ளார். அறிமுக நாயகி மேகா, பிக்பாஸ் ரைசா, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை பாலா இயக்கியுள்ளார். படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அப்போது விழாவில் கலந்துகொண்ட சீயான் விக்ரம் பேசும்போது.... 

 

 

 

"நான் பணியாற்றிய இயக்குனர்கள் அனைவரும் சிறந்தவர்கள். அவர்கள் ஒவ்வொவருவருக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அதுபோல் இயக்குனர் பாலாவிடம் உள்ள சிறப்பு ஒரு கல்லை கூட நடிக்க வைத்து விடுவார். அந்த அளவுக்கு அவர் திறமைசாலி. பெரும்பாலான இயக்குனர் படத்தில் பல விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால் பாலா நடிகர்களின் நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவார். அதனால் தான் அவர் படத்தில் நடிக்கிறவர்கள் நன்றாக நடிக்கிறார்கள். என்னையே நடிக்க வைத்தாரென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மேலும் துருவ் படத்தை சிறு வயது முதல் அவர் தான் இயக்கவேண்டும் என்று எண்ணினார். மேலும் இப்படத்தில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வேறு உள்ளது. எனவே எனக்கு எப்படி பாலா திருப்புமுனையாக இருந்தாரோ அதுபோல் என் மகனுக்கும் அவரே முதல் படத்தை இயக்க வேண்டும் மேலும் நல்ல மோதிர கையால் குத்தப்படவேண்டும் என்று எண்ணினேன். அதன்படியே நடந்தது. ரீமேக் படங்களே இயக்காத பாலா எனக்காகவும், துருவ்வுக்காகவும் ஒத்துக்கொண்டதற்கு நன்றி. அவர் முதல் முறையாக புதுமுகங்கள் வைத்து இயக்கியுள்ளார். மேலும் துருவ்வும் நன்றாக நடித்திருப்பான் என்ற நம்பிக்கை உள்ளது. வந்திருந்த அனைவருக்கும் நன்றி. இதில் எனக்கு சிலர் துரோகிகளாக மாறிவிட்டனர். இனி நான் உங்கள் ரசிகர் இல்லை. துருவ்வின் ரசிகர் என்று கட்சி மாறிவிட்டனர். அவர்களை நான் பின்னாடி கவனித்து கொள்கிறேன்" என்றார் ஆனந்த குமுறலோடு.

விக்ரம் பேசிய வீடியோவிற்கு கீழே கிளிக் செய்யவும். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வர்மா படத்தின் புதிய டைட்டில் !

Published on 19/02/2019 | Edited on 19/02/2019
varma

 

 

'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'வர்மா' படத்தை பாலா இயக்கினார். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாரான நிலையில் வர்மா படத்தை கைவிடுவதாகவும், மீண்டும் துருவ் நடிப்பில் படம் உருவாகி ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இது திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பட இயக்குனர் பாலா 'படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகுவது நான் மட்டுமே எடுத்த முடிவு. துருவ்வுடைய எதிர்காலம் கருதி மேற்கொண்டு பேச விரும்பவில்லை' என இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் அளித்தார். இதையடுத்து அர்ஜுன் ரெட்டி தமிழ் படத்தை வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளதாகவும், நாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பின்னர் அக்டோபர் ஹிந்தி படத்தின் நாயகி 'பனிடா சந்து' படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்திற்கு 'ஆதித்ய வர்மா' என பெயரிடப்பட்டுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூகவலைத்தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இதில் நாயகியாக 'பனிடா சந்து' நடிக்கவுள்ளதாகவும், ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

வர்மா படத்தின் புதிய நாயகி இவர்தான் 

Published on 16/02/2019 | Edited on 16/02/2019
banita

 

 

'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'வர்மா' படத்தை பாலா இயக்கினார். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாரான நிலையில் வர்மா படத்தை கைவிடுவதாகவும், மீண்டும் துருவ் நடிப்பில் படம் உருவாகி ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இது திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பட இயக்குனர் பாலா 'படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகுவது நான் மட்டுமே எடுத்த முடிவு. துருவ்வுடைய எதிர்காலம் கருதி மேற்கொண்டு பேச விரும்பவில்லை' என இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் அளித்தார். இதையடுத்து அர்ஜுன் ரெட்டி தமிழ் படத்தை வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளதாகவும், நாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அக்டோபர் ஹிந்தி படத்தின் நாயகி 'பனிடா சந்து' இப்படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.