Skip to main content

‘வந்தால் அண்ணா, வராவிட்டால் பெரியார்’- சர்ச்சையில் விஜய்

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வரும் 22ம் தேதி வருகிறது. இதனை வருடா வருடம் விஜய்யின் ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.
 

vijay

 

 

ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜய் ரசிகர்கள் வெவ்வேறு வகையில் போஸ்டர்களை ஒட்டி கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் திண்டுக்கல்லில் ஒட்டப்பட்ட விஜய்யின் பிறந்தநாள் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

சம்மந்தப்பட்ட அந்த போஸ்டரில் நடிகர் விஜய்யுடன், அண்ணாவும் பெரியாரும் இருப்பதுபோல எடிட் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில், "நீங்கள் அரசியலுக்கு வந்தால் அறிஞர் அண்ணா, வராவிட்டால் பெரியார்" எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது. இது தான் சர்ச்சைக்கு காரணம்.
 

விஜய்யின் இந்த பிறந்தநாள் போஸ்டர் வைரலாகி வருவதால், மேலும் எதிர்ப்பு கிளம்பும் என்றே கருதப்படுகிறது.

 


 

சார்ந்த செய்திகள்