சன் பிக்சர்ஸ் தயரிப்பில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் விஜய்62 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஸ்டைக்கிற்கு மத்தியில் பரபரப்பாக படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பிற்கு திரையுலகில் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இது குறித்த விளக்கம் பட அதிபர்கள் சங்கம் தரப்பில் கடந்த 20ஆம் தேதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இதையறிந்த விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆரவாரம் செய்தார்கள். விஜய் வெளியே வருவாரா என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் விஜய் வரமாட்டார் என்று பலரும் கூறி வந்த நிலையில் விஜய் திடீரென்று வெளியே வந்து கூடி இருந்த ரசிகர்களை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்து குஷிபடுத்தினார்.
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
சார்ந்த செய்திகள்
Next Story
சர்கார் உண்மையில் லாபமா...? நஷ்டமா...? - பிரபல விநியோகஸ்தர் அதிர்ச்சி தகவல்
விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள சர்கார் படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் போட்ட பணத்தை எடுத்துவிட்டோம் என ஒரு வாரத்திற்கு முன்பு திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது சர்கார் வசூல் குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் பட லாபம், நஷ்டம் குறித்து பேசியபோது... "படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு கண்டிப்பாக போட்ட பணம் வந்திருக்கும். மேலும் சிலருக்கு லாபமும் கிடைத்திருக்கும். ஒரு எழுபதிலுருந்து என்பது சதவீதம் வரை தமிழ்நாட்டில் வசூல் செய்திருக்கும். சொல்லப்போனால் விநியோகஸ்தர்களுக்கு பெரிய லாபம் இல்லை" என்றார்.
Next Story
கேரளாவிலும் சர்ச்சையில் சிக்கிய சர்கார் ! விஜய் மீது புதிய வழக்கு
விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையே படத்தில் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அ.தி.மு.க தொண்டர்கள் தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி விஜய்யின் பேனர்களை கிழித்தனர். இதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயில் வீசி எரிக்கும் காட்சிகளை பட நிறுவனம் நீக்கியது. பின்னர் படத்தை மறுதணிக்கை செய்து திரையரங்குகளில் மறு வெளியீடு செய்தது படக்குழு. இந்நிலையில் தற்போது கேரளாவிலும் 'சர்கார்' படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. திருச்சூரில் உள்ள தியேட்டரில் விஜய் புகைப்பிடிக்கும் பேனர் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு திருச்சூர் சுகாதார துறை எதிர்ப்பு தெரிவித்து விஜய் மற்றும் கேரள விநியோகஸ்தர், தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. ஏற்கனவே கேரளாவிலுள்ள கொல்லத்தில் 'சர்கார்' படத்திற்காக நடிகர் விஜய்க்கு 175 அடியில் பேனர் வைத்து பின்னர் அதற்கு கேரள அரசு தடை விதித்ததையடுத்து அந்த பேனர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.