Skip to main content

நடிகர் அரவிந்த்சாமிக்கு ஹைகோர்ட் நோட்டீஸ் 

Published on 21/09/2018 | Edited on 21/09/2018
aravind swami

 

 

 

'சதுரங்க வேட்டை' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் மனோபாலா 'சதுரங்க வேட்டை 2' படத்தை நடிகர் அரவிந்த்சாமியை வைத்து தயாரித்தார். சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் நடிகர் அரவிந்த் சாமி தன் சம்பளபாக்கியான ரூ1.79 கோடியை வட்டியுடன் அளிக்க வேண்டும் என்று நடிகர் மனோபாலா மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் நடிகர் மனோபாலாவை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மனோபாலா அனுப்பிய பதில் மனுவில் அரவிந்த்சாமியுடன் சமரசமாக செல்லத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டு மேலும் ஐகோர்ட்டுக்கு தகவல் சொல்லாமல் தான் `சதுரங்க வேட்டை 2' படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேன் என்றும் முதல் தவணையாக ரூ25 லட்சம் ரூபாய் தரத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்திருந்தார். இந்நிலையில் மனோபாலாவின் பதில் மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு மனோபாலா மற்றும் அரவிந்த்சாமி இரு தரப்பினரும் வரும் அக்டோபர் 12ஆம் தேதி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அரவிந்தசாமிக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பித்து விடக் கூடியவர்' - கள்ளபார்ட் இயக்குனர் புகழாரம் 

Published on 11/02/2019 | Edited on 11/02/2019
aravindswami

 

 

மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் 'கள்ளபார்ட்'.  அரந்த்சாமி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். மேலும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை பி.ராஜபாண்டி இயக்குகிறார். வித்தியாசமான கதைக் களம் கொண்ட 'கள்ளபார்ட்' ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. மேலும் இப்படம் குறித்து இயக்குனர் ராஜபாண்டி பேசும்போது.... "அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பித்து விடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்திரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள் வாங்கி பிரதிபலிப்பார். அது ஸ்கிரீனில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தி விடும். கள்ள பார்ட் அவருக்கு சிகரமாய் இருக்கும். ரெஜினா டான்ஸ் டீச்சர் வேடம் ஏற்றிருக்கிறார். படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது" என்றார்.

 

 

Next Story

முடிவடையும் தருவாயில் அரவிந்த்சாமி, ரெஜினா நடிக்கும் 'கள்ளபார்ட்'

Published on 23/11/2018 | Edited on 23/11/2018
aravind swamy

 

 

 

மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் 'கள்ளபார்ட்'. அரந்த்சாமி, ரெஜினா இணைந்து நடித்துள்ள இப்படத்தில் வில்லனாக புதுமுகம் பார்த்தி நடிக்கிறார். மேலும்  ஹரிஷ் பெராடி, ஆதேஷ் பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தை பி.ராஜபாண்டி இயக்கி வருகிறார். வித்தியாசமான கதைக் களம் கொண்ட கள்ள பார்ட் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக ஏவி எம் ஸ்டூடியோவில் மிகப்  பிரமாண்டமான மூன்று விதமான அரங்குகள் அமைக்கப்பட்டு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்தின் முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. மேலும் அரவிந்த்சாமி, ரெஜினா சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரும்பகுதி அங்கு படமாக்கப்பட்டது. மேலும் இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடை பெற உள்ளது.