Skip to main content

'சமுத்திரக்கனி ஒரு மேதை' - வியந்த இயக்குனர்!

Published on 20/09/2018 | Edited on 21/09/2018
samuthirakani

 

முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் பிசியாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் சமுத்திரக்கனி யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கும் கதைகள் மற்றும் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அவர் நடிப்பில் அடுத்தாக வெளிவரவுள்ள படம் 'ஆண் தேவதை'. ரம்யா பாண்டியன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ராதாராவி, இளவரசு, சுஜா வருணி, ஹரீஷ் பெரடி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் விஜய் மில்டன் ஒளிப்பதிவில், ஜிப்ரான் இசையமைப்பில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை தாமிரா இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து அவர் பேசும்போது... "படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. சமகால சமுதாயத்தின் நெருங்கிய ஒரு பிரதிபலிப்பதாக இந்த 'ஆண் தேவதை'யை பார்க்கிறேன். இன்றைய நவீன உலகில் நிலவும் சூழ்நிலை நெருக்கடி பற்றியும், குறிப்பாக உலகமயமாக்கல் பற்றியும், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு எவ்வாறு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசுகிறது.

 

 

 

ஒரு சினிமாவானது இரண்டு வழிகளில் வெற்றி அடைகிறது. ஒன்று வெற்றிகரமான ஃபார்முலாவில் பயணித்து எளிதாக வெற்றி அடைகிறது. இன்னொன்று வழக்கத்துக்கு மாறான சினிமாவாக உருவாகி, முன்னோடியாக மாறுகிறது. ஆண் தேவதை வெற்றி பெறுவதோடு, தமிழ் சினிமாவில் ட்ரெண்ட்செட்டர் படமாக அமையும் என நம்புகிறேன். சமுத்திரக்கனியின் நடிப்பை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் ஒரு மேதை. மேலும் அவரது கவர்ந்திழுக்கும் திரை ஆளுமையால் நம் கவனத்தை அவர் பக்கம் திருப்பி விடுவார். ரம்யா பாண்டியன் அவர் கேரியரின் ஆரம்ப காலகட்டத்திலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக துணிச்சலாக நடித்திருக்கிறார். இது மிகவும் பாராட்டுதலுக்குரிய முயற்சி. படம் வெளியான பிறகு மக்களிடம் இருந்து அதற்காக பாராட்டுக்களை நிச்சயம் பெறுவார் என்று நான் நம்புகிறேன்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாடோடிகள் 2 திரைப்படத்துக்கு தடை நீங்கியது! 

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

நடோடிகள்- 2 திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை  நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

நடிகர் சசிகுமார், நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில்  நாடோடிகள் -2 திரைப்படத்தை தயாரிப்பாளர் நந்தகோபால் தயாரித்துள்ளார்.

nadodigal 2 movie release permission chennai high court order

இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி எப்.எம்.பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், நாடோடிகள் படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், படத்தயாரிப்பு செலவுகளுக்காகத் தன்னை அணுகியபோது, படத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உரிமையை அளிப்பதாக, ரூ.5 கோடியே 25 லட்சத்துக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கபட்டுள்ளது. பல தவணைகளாக ரூ.3 கோடியே 50 லட்சம் தயாரிப்பாளருக்கு வழங்கிய நிலையில், வேறு நிறுவனம் மூலமாக படத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியிட தயாரிப்பாளர் நடவடிக்கைகள் எடுத்து வருவதால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டது. படத்தின் உரிமை தனக்கே சொந்தமானது என அறிவிக்க வேண்டும், அதுவரை படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டது. 

nadodigal 2 movie release permission chennai high court order

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, திரையரங்குகளில் படத்தை நேற்று (30/01/2020) வெளியிடுவதற்காக "கீ டெலிவரி மெசேஜ்" தர கியூப் நிறுவனத்திக்குத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தயாரிப்பாளர் நந்தகோபால் சார்பில் இன்று (31/01/2020) நீதிபதி பி.டி.ஆஷா முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது. அப்போது தயாரிப்பாளர் சார்பில் கொடுக்க வேண்டிய தொகையில் பாதி தொகையை அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, படத்தை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி படத்தை வெளியிடலாம் என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

Next Story

நாடோடிகள் 2 வெளியிட இடைக்காலத்தடை!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

நாளை (31/01/2020) வெளியாகவிருந்த நிலையில், நாடோடிகள்- 2 திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

நடிகர் சசிகுமார், நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில்  நாடோடிகள்- 2 திரைப்படத்தை தயாரிப்பாளர் நந்தகுமார் தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படம் நாளை ரிலீஸாகவிருந்தது.   

nadodigal 2 film financial issues  chennai high court

இந்தப் படத்திற்குத் தடை விதிக்கக்கோரி, எப்.எம்.பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், நாடோடிகள் படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார், படத் தயாரிப்பு செலவுகளுக்காகத் தன்னை அணுகியபோது, படத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உரிமையை அளிப்பதாகக் கூறி, ரூ.5 கோடியே 25 லட்சத்துக்கு  ஒப்பந்தம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

பல தவணைகளாக, ரூ.3 கோடியே 50 லட்சத்தை தயாரிப்பாளருக்கு வழங்கிய நிலையில், வேறு நிறுவனம் மூலமாக படத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியிட தயாரிப்பாளர் நந்தகுமார் நடவடிக்கைகள் எடுத்து வருவதால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார். ஒப்பந்தத்தை மீறி படத்தை வெளியிட முயற்சிப்பது குறித்து தயாரிப்பாளரிடம் கேட்டதற்கு, அவர் மழுப்பலான பதில் அளித்ததாகவும், ஒப்பந்தப்படி மீதமுள்ள ரூ.1 கோடியே 75 லட்சத்தை அளிக்கத் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

nadodigal 2 film financial issues  chennai high court

படத்தின் உரிமை தனக்கே சொந்தமானது என அறிவிக்க வேண்டும். அதுவரையிலும் படத்தை வெளியிடுவதற்கான "கீ டெலிவரி மெசேஜ்" திரையரங்குகளுக்குத் தர "கியூப்"-க்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்காக  "கீ டெலிவரி மெசேஜ்" தர, கியூப் நிறுவனத்திற்க்குத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனு தொடர்பாக பதில் அளிக்க படத் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்திற்குத் தள்ளிவைத்தார்.