Skip to main content

மாதவன் மேல் வழக்கு தொடர்ந்த பிரபல இசையமைப்பாளர் 

Published on 03/11/2018 | Edited on 03/11/2018
madhavan

 

இறுதிசுற்று படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்து, விக்ரம் வேதா படம் மூலம் இரண்டாவது ரவுண்டில் வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் மாதவன் அடுத்ததாக இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அடங்கிய படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இந்நிலையில் பூ, களவாணி படங்களின் இசையமைப்பாளரும், கேரள நாட்டிளம் பெண்களுடனே, தேநீர் விடுதி ஆகிய படங்களை இயக்கிய எஸ்.எஸ்.குமரன் இப்படத்தின் கதை உரிமை தன்னிடம் இருப்பதாகவும், தனது அனுமதி இல்லாமல் படமாக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மனு கொடுத்துள்ளார். இதற்கிடையே எதிர்ப்பை மீறி படமாக்கும் பணிகளை மாதவன் தொடங்கியுள்ள நிலையில் மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்ப போவதாக எஸ்.எஸ்.குமரன் தற்போது அறிவித்து உள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியபோது....

 

 

 

"இருபது ஆண்டுகளுக்கு முன்பு நம்பி நாராயணன் வாழ்க்கை கதையை தொலைக்காட்சி தொடராக தயாரித்தேன். ஆனால் சில சட்ட பிரச்சினைகளால் அது வெளியாகவில்லை. இதனால் எனக்கு பெரிய அளிவில் நஷ்டம் ஏற்பட்டது. எனது நிலையை மாதவனிடம் தெரிவித்தபிறகும் அவர் பிடிவாதமாக படத்தின் தொடக்க விழாவை நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. எனது அனுமதி இல்லாமல் நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்க கூடாது. எனவே மாதவன் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரோவில் மாதவன்! 

Published on 21/03/2018 | Edited on 22/03/2018
madhavan


'இறுதிசுற்று' படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்த நடிகர் மாதவன் அடுத்ததாக நடித்த விக்ரம் வேதா வெற்றி பெற்றதையொட்டி அவரது  மார்க்கெட் மீண்டும் உச்சத்திற்கு சென்றது. இந்நிலையில் சமீபத்தில் சயீப் அலிகானுடன் இந்தி படமொன்றில் நடிக்க இருந்த மாதவன் தோள்பட்டை காயம் காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அந்த காயத்திற்காக மாதவன் அறுவை சிகிச்சை செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. வேகமாக குணமடைந்து வரும் அவர் அடுத்ததாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கைப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஆனந்த் மகாதேவன் இயக்க இருக்கிறார். இந்த படம் நம்பி நாராயணனின் பிரபல புத்தகமான 'ரெடி டூ ஃபயர்: ஹவ் இந்தியா அண்ட் ஐ சர்வைவ்டு த இஸ்ரோ ஸ்பை கேஸ்' (Ready to Fire: How India and I Survived the ISRO Spy Case) புத்தகத்தை தழுவி உருவாக இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.