Skip to main content

விஷால் டீமுடன் இணையும் சிவகார்த்திகேயன்...அதிகாரபூர்வ அறிவிப்பு !

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
sivakarthikeyan

 

 

 

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'சீமராஜா' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சிவா தற்போது ஒரே நேரத்தில் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் இவ்விரு படங்களை தொடர்ந்து அடுத்ததாக 'இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக சில நாட்களுக்கு முன் தகவல் பரவியது. இந்நிலையில் தற்போது இந்த தகவலை  உறுதிப்படுத்தி 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனர் ஆர்.டி.ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "நல்ல பொழுதுபோக்கான படங்களை கொடுத்துவரும் இந்த அழகான பயணத்தில், இன்று உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்தோடும், ஆதரவோடும் புரொடக்‌ஷன்ஸ் எண் 7வது படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பி.எஸ்.மித்ரனுடன் இணைவதில் மகிழ்ச்சி. மற்ற தகவல்கள் அணைத்தும் விரைவில் வெளியாகும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் இயக்குனர் பி.எஸ்.மித்ரனும் தன் ட்விட்டர் பக்கத்தில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்த சிஸ்டத்தை மாற்ற வருகிறாரா சிவகார்த்திகேயன்..? - வெளியானது ஹீரோ டீசர்!

Next Story

சிவகார்திகேயனுடன் நடிக்கும் பிரபல இயக்குனரின் மகள் 

Published on 18/02/2019 | Edited on 18/02/2019
kalyani

 

 

சிவகார்த்திகேயன் - ராஜேஷ்.எம் கூட்டணியில் உருவாகி வரும் 'மிஸ்டர்.லோக்கல்' மற்றும் ரவிக்குமார் இயக்கத்திலும் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கல்யாணி பிரிதர்ஷன் ஹலோ என்ற தெலுங்கு படத்திலும், தமிழில் துல்கர் சல்மானுடன் 'வான்' படத்திலும்  நடிக்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.