Skip to main content

'கண்ட கண்ட மீம்ஸ் ஷேர் பண்ணாதீங்க' - சதிஷ் 

Published on 04/08/2018 | Edited on 04/08/2018

 

maniyarfamily

 

sathish

 

 

 

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பூமராங்'. 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் இசை தகட்டினை கலைப்புலி எஸ் தாணு, சத்யஜோதி தியாகராஜன் வெளியிட, சுஹாசினி மணிரத்னம் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் சதிஷ் பேசும்போது..... 

 

 

 

"தற்போதைய மிக முக்கியமான பிரச்சினையை பேசியிருக்கிறது இந்த 'பூமராங்'. ஆயுத எழுத்து படத்தில் வந்த 'ஜன கன மண' பாடலை போன்ற ஒரு பாடல் தான் இந்த 'தேசம்' பாடலும். எல்லா வேலையையும் தன் தோள்களில் போட்டுக் கொண்டும் கூட, மிகச்சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார். தண்ணீர் சேமிப்பை நாம் வீட்டில் இருந்தே தொடங்கலாம். நீரை வீணாக்காதீர்கள், இன்னும் கொஞ்ச காலத்துக்கு அப்புறம் தண்ணீர் பஞ்சம் வரும். மீம்ஸ் போடறவங்க எல்லாம் கொஞ்சம் பொறுப்பா இருக்கணும், மக்களும் கண்ட கண்ட மீம்ஸ் ஷேர் பண்ணாதீங்க" என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நதிகளை இணைப்பது என்ற விவாதத்திற்குரிய ஒரு விஷயத்தை பேசியிருக்கிறோம்' - அதர்வா 

Published on 09/03/2019 | Edited on 09/03/2019
atharvaa

 

அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் இணைந்து நடித்த பூமராங் படம் மார்ச் 8ஆம் தேதி (நேற்று) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இதுகுறித்து நாயகன் அதர்வா பேசியபோது.... "கண்ணன் சார் அவருடைய கலைத்திறமையை தாண்டி, அரிதான பல தனிப்பட்ட திறமைகளை கொண்டிருக்கிறார். யாரும் அவ்வளவாக பேசாத சமூக பிரச்சினைகள் பற்றி படங்களில்  பேசுவது அதில் ஒன்று. நாம் பல ஆண்டுகளாக சமூக வணிக ரீதியான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட, சமகாலத்திய பிரச்சினைகளை பேசும் பல படங்களை பார்த்திருக்கிறோம். எனினும், அவர் எனக்கு சொன்ன 'பூமராங்' ஸ்கிரிப்ட்டை முற்றிலுமாக புதிதாக உணர்ந்தேன். நாம் ஏற்கனவே சொன்னபடி, இது இந்தியாவில் உள்ள நதிகளை இணைப்பது என்ற விவாதத்திற்குரிய ஒரு விஷயத்தை பற்றி பேசும் படம். பூமராங் காதல், காமெடி, எமோஷன் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அம்சங்களை கொண்ட ஒரு முழுமையான பொழுதுபோக்கு படம் என்று தான் சொல்லுவேன். மேலும், கண்ணன் சார், ஸ்கிரிப்ட்டில் சில ஆச்சரியமான விஷயங்களை வைத்திருக்கிறார், அது எனக்கு மிகவும் புதியதாகவும் இருந்தது.

 

 

நான் எப்போதும் நல்ல படங்களில் ஒரு பகுதியாக இருப்பதை நம்புகிறேன். ஒரு படம் மிகச் சரியானதாக இருக்க ஒவ்வொரு நடிகருக்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் முக்கியத்துவம் இருக்க வேண்டும். இந்த விதத்தில், கண்ணன் சார், கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் மிகச்சிறந்த வேலையை செய்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி, உபென் படேல், மேகா ஆகாஷ், இந்துஜா உட்பட அனைவரது கதாபாத்திரத்திற்கும் உண்டான நியாயத்தை செய்திருக்கிறார் கண்ணன் சார். ரதனின் பாடல்கள் ஒரு தனித்துவமான உணர்வை உருவாக்கியுள்ளன. ஒரு படத்திலிருந்து மற்றொரு படத்திற்கு வலுவான மற்றும் சிறந்த பின்னணி இசையை வழங்கி தன்னை மேம்படுத்தி வருகிறார். ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமாரின் வண்ணங்கள் மற்றும் கலர் டோன் மிகவும் புதுமையாக இருக்கிறது. அவருடைய கேமரா, பச்சோந்தி போல சூழ்நிலையைப் பொறுத்து அதன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது  என்று நகைச்சுவையாக அவரது வேலையை பற்றி குறிப்பிடுவது உண்டு" என்றார்.

 

 

Next Story

'ரஜினி சார் இதற்கு பின்னால் இருந்த ஒவ்வொரு விவரத்தையும் மிக ஆர்வத்துடன் கேட்டார்' - இயக்குனர் ஆர்.கண்ணன் 

Published on 09/03/2019 | Edited on 09/03/2019
rajini

 

 

பூமராங் படத்தின் ட்ரைலர் மற்றும் ப்ரோமோ காட்சிகளை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொத்த படக்குழுவையும் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து இயக்குனர் கண்ணன் கூறும்போது.... "ரஜினி சார் எங்கள் படத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சிகளை ரசித்த விதத்தை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக இந்திய நதிகளை இணைப்பதன் அடிப்படையிலான 'தேசமே' பாடலை அவர் மிகவும் ரசித்தார். இந்த பாடலை பார்த்து மிகவும் உற்சாகம் அடைந்ததோடு, பாடலின் பிரமாண்டத்தையும் வெகுவாக பாராட்டினார். அவர் அத்துடன் நிறுத்தாமல், இந்தப் பாடல் உருவாக்கத்தின் பின்னால் இருந்த ஒவ்வொரு விவரத்தை பற்றியும் மிக ஆர்வத்துடன் கேட்டார்" என்றார். பூமராங் படத்தை மசாலா பிக்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கியிருக்கிறார் ஆர்.கண்ணன். அதர்வா முரளி, மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜி, உபென் படேல், சதீஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் நதிகள் இணைப்பை அடிப்படையாக கொண்ட ஒரு சமூக, வணிக ரீதியான பொழுதுபோக்கு படமாகும்.