Skip to main content

"இடைவெளி இல்லா தாக்குதல்கள்; ஆனால், உடைந்து போகமாட்டேன்" - சமந்தா பதிவு!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

samantha

 

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை  கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடிப்பதை சமந்தா தொடர்ந்து வந்தார். சமீபகாலமாக சமந்தாவிற்கு நாக சைதன்யாவிற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. தொடக்கத்தில் இதை இருவரும் மறுத்துவந்த நிலையில், கடந்த இரண்டாம் தேதி இருவரும் பிரிய உள்ளதாக அறிவித்தனர். இதையடுத்து, இவர்கள் விவகாரத்திற்கான காரணம் குறித்து சமூக வலைதளங்களில் பல விவாதங்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக அவையனைத்தும் சமந்தாவை தாக்கியே இருந்தன. அத்தகைய விமர்சனங்களுக்கு சமந்தா ரசிகர்களும் பதிலடி கொடுத்துவந்தனர்.

 

இந்த நிலையில், தனக்கு ஆதரவாக நின்ற ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அத்தகைய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் சமந்தா ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "என்னுடைய தனிப்பட்ட விவகாரத்தில் உளப்பூர்வமாக நீங்கள் காட்டிய அன்பு, எனக்கு மனநிறைவைத் தந்தது. என் மீது அனுதாபத்தை வெளிப்படுத்தியதற்கும் எனக்கெதிரான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்ததற்கும் நன்றி. எனக்கு வேறொரு உறவு இருந்தது, குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை, நான் சந்தர்ப்பவாதி, தற்போது கருக்கலைப்பு செய்துள்ளேன் என்றெல்லாம் அவர்கள் கூறினார்கள். விவாகரத்து என்பதே வலிகள் நிறைந்த வழிமுறை. காலம் என்னைக் குணப்படுத்த என்னை தனியாக விடுங்கள். இந்தத் தாக்குதல் என் மீது இடைவெளி இல்லாமல் தொடுக்கப்பட்டது. இதுவோ, இவர்கள் கூறும் மற்ற விஷயங்களோ என்னை ஒருபோதும் உடைத்துவிடாது என உறுதியாகக் கூறுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கக் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்

Published on 16/07/2023 | Edited on 16/07/2023

 

Actress Samantha Swamy Darshanam at Golden Temple


வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோவில். இங்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும்  நடிகர் நடிகைகள் வந்து சாமி தரிசனம் செய்ய வருகை தருவது வழக்கம்.

 

Actress Samantha Swamy Darshanam at Golden Temple

 

இந்நிலையில் நேற்று பொற்கோவிலுக்கு வந்த பிரபல நடிகை சமந்தா ஸ்ரீ நாராயணி அம்மனை தரிசனம் செய்துள்ளார். பின்பு தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு தனது கையால் அபிஷேகம் செய்தும், தீபாராதனையும் செய்த பிறகு கோயிலை சுற்றி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொற்கோயில் மடாதிபதி சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அவருக்கு சக்தி அம்மா பிரசாதத்தை வழங்கியுள்ளார். வேலூர் பொற்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த சமந்தாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

Next Story

கோஷ்ட் Vs பிரின்ஸஸ்... பாலிவுட்டில் மிரட்ட இருக்கும் சமந்தா

Published on 09/09/2022 | Edited on 09/09/2022

 

Samantha debuting Bollywood movie

 

யசோதா, சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சமந்தா, தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘குஷி’ எனும் படத்தில் நடித்து வருகிறார். ரொமான்டிக் கலந்த காமெடி படமாக உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.  தென்னிந்திய மொழிகளில் பிரபலமாக இருக்கும் சமந்தா, தற்போது இந்தி திரையுலகில் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கவுள்ளார். 

 

அதன்படி பாலிவுட் இயக்குநர் அமர் கௌசிக் இயக்கும் புதிய படத்தில் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் சமந்தா இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளாராம். அதில் ஒன்று இளவரசி கதாபாத்திரம் என்றும், மற்றொன்று பேய் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. அதற்காக தன்னை முழுவதுமாக தயார்படுத்திக்கொள்ள சமந்தா பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

 

இதற்கு முன்பு பாலிவுட் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். இத்தொடர் வெளியாகி பெரும் விமர்சனத்தையும், எதிர்ப்பையும் சம்பாதித்த நிலையில், சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து ‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டீகே இயக்கும் மற்றொரு வெப் தொடரில் வருண் தவானுடன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.