Skip to main content

”அசிஸ்டண்டா நயன்தாரா முன்னால திட்டு வாங்கிய நான் இன்னைக்கு அவங்கள வச்சே படம் பண்ணிருக்கேன்” - ஜி.கே. விக்னேஷ் நெகிழ்ச்சி

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

O2 Movie Director

 

ஜி.கே. விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆக்சிஜன் (O2). இப்படம் நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் ஜி.கே. விக்னேஷை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் O2 படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

”இந்தக் கதையை எழுத நான் கொடுத்த உழைப்புதான் என்னை இந்த இடத்திற்குக் கொண்டுவந்துள்ளது. o2 கதையில் நடிக்கச் சம்மதம் தெரிவித்ததற்காக நயன்தாரா மேம்க்கு நன்றி. பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஷார்ட் ஃபிலிம் எடுத்தேன். அதன் மூலமாக சினிமாவுக்குள் வந்து தற்போது என்னுடைய அறிமுகப்படத்தை இயக்கியிருக்கிறேன். படத்தில் சில காட்சிகள் ரொம்பவும் கடினமாக இருக்கும். ஆனால், நயன்தாரா மாதிரியான அனுபவம் வாய்ந்த நடிகர் நடிக்கும்போது அதை எளிமையாகப் படமாக்க முடிந்தது. இது உன்னுடைய முதல் படம். நல்லா பண்ணு என்று நயன்தாரா மேமும் என்கரேஜ் பண்ணார். கதையில் அவருக்காக எந்த மாற்றமும் செய்யவில்லை. நான் என்ன  எழுதினேனோ அதில்தான் நடித்தார். அறிமுக இயக்குநர் என்று நினைக்காமல் என் மீது நம்பிக்கை வைத்து நடித்ததற்காக அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 

 

இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்ஸிஜனை மையப்படுத்திய கதை. படத்தில் யூடியூப் பிரபலம் சிறுவன் ரித்விக் சிறப்பாக நடித்துள்ளார். நான் சொல்வதை ஈஸியாக உள்வாங்கிக்கொண்டு நடித்தார். இவ்வளவு சின்ன வயதிலேயே அவருக்கு அந்தத் திறமை இருக்கிறது. முழுப்படமும் ஒரே பஸ்ஸிற்குள் நடப்பதால் ஆடியன்ஸுக்கு போரடித்துவிடக்கூடாது என்று கூடுதல் மெனக்கெடலுடன் திரைக்கதை எழுதினேன். டெக்னிக்கலாகவும் படம் சிறப்பாக வந்துள்ளது.

 

மாஸ் படத்தில் நான் உதவி இயக்குநராக வேலை பார்க்கும்போது நயன்தாரா மேம் முன்னால் செட்டில் நிறைய திட்டு வாங்கிருக்கேன். ஒருமுறை நான் திட்டு வாங்கியதும் அவங்க சிரிச்சாங்க. அப்படி இருந்த நான் இன்னைக்கு அவங்கள வச்சு படம் பண்ணிருக்கேன் என்று நினைக்கும்போதே ரொம்பவும் சந்தோசமா இருக்குது”. இவ்வாறு ஜி.கே. விக்னேஷ் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜெய் ஸ்ரீராம்...” - வருத்தம் தெரிவித்த நயன்தாரா  

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Nayanthara expresses regret over Annapoorani film issue

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான அன்னபூரணி படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அன்னபூரணி படம் வெளியான நிலையில், இப்படத்தில் கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக வரும் ஒரு காட்சியை குறிப்பிட்டு, இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாக மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

அதனடிப்படையில் நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு இப்படத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் படத்தை தடை செய்யவேண்டும் எனப் பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்னப்பூரணி படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் நடிகை நயன்தாரா இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெய் ஸ்ரீராம் என்று குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ எனது நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். 

'அன்னபூரணி' திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே 'அன்னபூரணி' திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம். அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

விக்னேஷ் சிவன் தந்தை மீது போலீசில் புகார்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 Complaint of extortion of property against director Vigneshsivan's father

 

தமிழில் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இவர் பிரபல நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டு மனைவி நயன்தாராவுடன் வாழ்ந்து வருகிறார்.

 

இவரின் திருமணத்திற்கு உறவினர்கள் யாரையும் கூப்பிடாமல் பிரபலங்களை மட்டுமே வைத்து நடத்திவிட்டார் என்று இவரின் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்து வந்தனர். இந்த நிலையில் இவரது தந்தை சிவகொழுந்து உறவினர்களின் சொத்தை அபகரித்து விட்டதாக லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 

அந்த புகாரில் சிவகொழுந்துவின் உடன்பிறந்த சகோதரர் ஒருவருக்கு தர வேண்டிய நிலத்தின் பங்கினைத் தராமல் அபகரித்துக் கொண்டதாகவும், அந்த சொத்திற்கு ஒரு வகையில் பங்குதாரரான விக்னேஷ் சிவனின் தாயார் மீனாகுமாரி மற்றும் அந்த குடும்பத்தின் மருமகள் நயன்தாரா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.