Skip to main content

சமந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
nayanthara wished samantha

சமீப காலமாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார் சமந்தா. தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அது பூரண குணமடைய தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்திருந்தார். தமிழில் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.  இப்போது கைவசம் 'சிட்டாடெல்' வெப் தொடர் வைத்துள்ளார். இதன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். பின்பு சமீபத்தில் இத்தொடரை பார்த்ததாகவும் தங்களுக்கு பிடித்ததாகவும் படக்குழுவுடன் இருக்கும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து மீண்டும் நடிப்பிற்கு திரும்புவதாக தெரிவித்திருந்தார். மேலும் உடல்நலம் குறித்த பாட்கேஸ்ட் ஒன்றை வெளியிட்டுவதாக தெரிவித்த அவர் அண்மையில் அதனை வெளியிட்டுருந்தார்.

இந்த நிலையில் சமந்தா கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் ‘யே மாயா சேசவே’ என்ற தெலுங்கு படம் இன்று வெளியாகி 14 ஆண்டுகளை கடக்கிறது. இதன் மூலம் திரைத்துறைக்கு அவர் வந்து 14 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நயன்தாரா அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், சமந்தா புகைப்படத்தை பகிர்ந்து நீங்கள் அதிக ஆற்றல் பெற வேண்டும் என்கிற தொனியில் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார். இருவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்