Skip to main content

"ரொம்ப சந்தோசம் மணி..." - பாரதிராஜா நெகிழ்ச்சி

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

manirathnam meets bharathiraja

 

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய பாரதிராஜா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அருள்நிதியுடன் இணைந்து ‘திருவின் குரல்’ மற்றும் தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'தாய்மெய்' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னம் தன்னை நேரில் வந்து சந்தித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இது தெடர்பான சிறிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதில் மணிரத்னத்தை பார்த்த பாரதிராஜா அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த வீடியோவின் பதிவில், "ரொம்ப சந்தோசம் மணி..." என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

 

தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குநர்களாகப் பார்க்கப்படும் இருவரும் ஒன்றாக சந்தித்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மணிரத்னம் தற்போது 'பொன்னியின் செல்வன் 2' பட பணிகளில் பிசியாக உள்ளார். இப்படம் அடுத்த மாதம் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து கமலின் 234வது படத்தை இயக்கவுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்