Skip to main content

 “அதான் துப்பாக்கியை வாங்கிட்டார்ல” - சிவகார்த்திகேயன் குறித்து லோகேஷ் கனகராஜ் 

Published on 19/10/2024 | Edited on 19/10/2024
lokesh kanagaraj about sivakarthikeyan in amaran audio launch

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அமரன்’. இப்படத்தை கமல் தயாரித்திருக்க சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் ‘ஹே மின்னலே’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படம் வருகிற தீபாவளியன்று(31.10.2024) வெளியாகவுள்ளது. இதனால் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் மணிரத்னம், தயாரிப்பாளர் தாணு, லோகேஷ் கனகராஜ், மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

அப்போது லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “கமல் சார் இந்தப் படத்தை நிறைய டிஸ்யூ பேப்பர்களை வைத்துக் கொண்டு பார்த்தார் என கேள்வி பட்டேன். அந்தளவிற்கு தாக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தும் என நினைக்கிறேன்” என்றார். அவரிடம் சிவகார்த்திகேயனுடன் எப்போது இணைவீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ரொம்ப வருஷமாக அது குறித்து பேசிக்கிட்டு இருக்கோம். கரெக்டான நேரம் அமையும் போது நடக்கும். அதான் துப்பாக்கியை கையில் வாங்கிட்டார்ல... பண்ணிடலாம்” என்றார். 

சார்ந்த செய்திகள்