Skip to main content

அதை காட்டிலும் இதில் அதிகமாக மெனக்கிடல் செய்துள்ளேன் - லிங்குசாமி 

Published on 26/09/2018 | Edited on 26/09/2018
linguswamy

 

விஷால் - லிங்குசாமி கூட்டணியில் உருவாகி வரும் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் விஷால், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண், ஒளிப்பதிவாளர் சக்தி, எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசியபோது.... "நேற்று விஷால் இந்த படத்தை பார்த்து இதில் நடித்தவர்கள் எல்லாரும் அப்படியே உள்ளனர் பதிமூன்று வருடம் ஆனது போல் தெரியவில்லை என்றார். எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது. விஷால் போன படத்தின் பேஜ் ஒர்க்குக்காக கூப்பிட்டாலும் வந்துவிடுவார். எவ்வளவு வேலை, இரண்டு சங்கத்திலும் தலைமை பொருப்பு, அதையும் தாண்டி இப்படி மெய்ண்டன் பண்ணுவது மிக பெரிய விஷியம். அது அவர்கள் அப்பாவிடம் இருந்து வந்தது. அவரும் எப்போதும் சரியாக இருப்பார். நான் முதல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போதே ஜி.கே பேக்டரி தெரியும். விஷாலை தம்பி, முதலாளி, நண்பன் என எப்படி வேண்டுமானாலும் அழைப்பேன்.

 

 

 

சண்டக்கோழி முதல் பாகம் நடித்த விஷாலை இரண்டாம் பாகத்திலும் அப்படியே உணர்ந்தேன். முதல் பாகத்தை காட்டிலும் இதில் அதிகமாக மெனக்கிடல் செய்துள்ளேன். மேலும் இந்த பாகத்தில் அனைவரும் நன்றாக நடித்துள்ளார். நான் சூர்யா, மாதவன், அஜித் சாருடன் வேலை செய்துள்ளேன். அதன் பின் விஷாலுடன் வேலை செய்யும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவர் வருவதை உணர்ந்தேன். எனக்கும், விஷாலுக்கும் இது அருமையான படமாக அமையும். ஏனென்றால் எங்களுக்கு அப்படியொரு குழு அமைந்து அவ்வளவு உழைப்பை போட்டுள்ளது. நான் கேட்டதை அனைத்தும் செய்து கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. ஒரு வார்த்தையில் கவிதை சொல்ல வேண்டும் என்றால் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷுடன் வேலை பார்த்தது சாவித்திரியுடன் வேலை பார்த்தது போல இருந்தது. மீரா ஜாஸ்மீன் இடம், ஹீரோ இடம், வில்லன் இடம் என அனைத்தும் சரியாக அமைய வேண்டும் என நினைத்தேன். எனக்கு சவாலாக அமைந்தது மீராஜாஸ்மீன் கதாபாத்திரம் தான். அது முக்கியமாக சரியாக அமைய வேண்டும் என நினைத்தேன். கீர்த்தி தான் அதற்கு சரியாக இருப்பார் என தோன்றியது. 

 

 

 

இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இசையமைத்த இரும்புத்திரையும், அவர் தயாரித்த படமும் பெரிய வெற்றியை தந்தது. மதன் கார்கி எழுதிய பாடலுக்கு மூன்று நிமிடத்தில் இசையமைத்து கொடுத்தார். பாடல் அருமையாக வந்துள்ளது. நா.முத்துக்குமார் அவர்கள் இப்போது இல்லை. அவருக்கு நிகராக அருண்பாரதி, ஏகாதசி உள்ளனர். பிருந்தாசாரதி 'சூரியரும் சூரியனும்' என்ற பாடலை எழுதியுள்ளார். எடிட்டர் பிரவீன் கே.எல் சாருடன் முதல் முறையாக பணியாற்றுகிறேன். அவர் தான் படம் விரைவில் வெளிவர முக்கிய காரணமானவர். தென்னவன் சார், சண்முகம் சார் இன்னும் நாலு பாகம் எடுத்தாலும் உடன் இருப்பார்கள். ஒளிப்பதிவாளர் சக்தி 'ரன்' படத்தில் ஜீவா சாரின் கடைசி அசிஸ்டன்ட். இந்த படத்தின் வளர்ச்சி அவரை சேரும். 800 பேர் கூட்டத்திலேயே படம் முழுவதும் எடுக்கும் விதமாக இருந்தது. பையா எப்படி காருக்குள்ளையே ஒரு படமோ, அதே போல் இது ஒரு திருவிழாக்குள்ளேயே ஒரு படம். ராஜ் கிரன் சார் அருமையாக நடித்துள்ளார். முதல் பாக தயாரிப்பாளர் விக்கிக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுளேன். நன்றி" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னணி நாயகனுடன் படம்...! மீண்டும் இயக்கும் குட்டிப்புலி நடிகர்

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்பு நடிகராக மாறிய மணிவண்ணன், மனோபாலா, சிங்கம்புலி வரிசையில் இப்போது  இயக்குனர் மற்றும் நடிகர் குட்டிப்புலி புகழ் சரவண சக்தியும் இணைந்துள்ளார்.

 

saravana sakthisss


தண்டாயுதபாணி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்த இவர் பின்பு ரித்தீஷ் உடன் இணைந்து இவர் இயக்கிய நாயகன் படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெற்று வசூல் செய்தது. இதையடுத்து அவர் சசிகுமாரின் நடிப்பில் வெளிவந்த குட்டிபுலி படம் மூலம் நடிகராக அறிமுகமாகி பின்னர் மருது, சண்டக்கோழி 2, கொடிவீரன், தர்மதுரை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தற்போது மாமனிதன், ரண சிங்கம், அடுத்த சாட்டை, வால்ட்டர் என 25 படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். இதற்கிடையே இவர் சமீபத்தில் ஆர்.கே சுரேஷ் நடிப்பில் அஜித் ரசிகரை மையப்படுத்தி உருவான பில்லா பாண்டி படம் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்நிலையில் இவர் நடிப்பதற்கிடையில் விரைவில் தனது அடுத்த படத்தை இயக்கும் வேலையில் மும்பரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக ஒரு முன்னணி கதாநாயகருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

 

Next Story

சண்டக்கோழி 2வில் கார்த்தி....லிங்குசாமி வெளியிட்ட புதிய தகவல் 

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
lingusamy

 

 

 

விஷால், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள 'சண்டக்கோழி 2' படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்துள்ள இப்படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நடிகர் கார்த்தியும் இணைந்து பணியாற்றியுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்...."சண்டக்கோழி 2' படத்தில் பின் குரல் கொடுத்ததற்காகவும், இப்படக்குழுவில் இணைந்தமைக்காகவும் கார்த்திக்கு எனது சிறப்பு நன்றிகள்" என குறிப்பிட்டுள்ளார்.