Skip to main content

சசிகுமாருடன் கீர்த்தி சுரேஷ்... 

Published on 19/09/2018 | Edited on 19/09/2018
keerthy suresh

 

 

 

'நடிகையர் திலகம்' மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக 'சாமி ஸ்கொயர்' படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. இதைதொடர்ந்து அவர் சண்டக்கோழி 2, சர்கார் மற்றும் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்று படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல்’ மற்றும் சத்ரியன் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிக் பாஸ் ஆரவ், சூரி, யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். ‘கொம்பு வச்ச சிங்கம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் பொள்ளாச்சிப் பகுதிகளில் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேட்ட இயக்குனர் படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

சில மாதங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்று பிரமிக்கவைத்தார். இவர் தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறார். இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் நேற்று அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில்.... 

 

keerthy

 

 

''அன்பார்ந்த ஊடக நண்பர்களே

வணக்கம்

தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் எங்களது 'படைப்பு எண் : 3', இன்று இனிதே கொடைக்கானலில் படப்பிடிப்புடன் துவங்கியது என்பதை மிகவும் பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை சக்தி வெங்கட்ராஜ் வசமும், ஆடை வடிவமைப்பு பல்லவி சிங் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியன் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக் குழு திட்டமிட்டிருக்கிறது.

என்றும் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்,

நன்றிகளுடன்,
ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

Next Story

மீண்டும் நடிகையர் திலகம் பாணியில் உருவாகும் படத்தில் கீர்த்தி சுரேஷ் 

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
keerthy

 

 

சர்கார் படத்திற்கு பிறகு சில நாட்கள் ஓய்வில் இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மீண்டும் 'நடிகையர் திலகம்' படம் பாணியில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். தெலுங்கில் உருவாக இருக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மேலும் பெரும்பாலான  காட்சிகள் வெளிநாட்டில் படமாக்க இருக்கிறது படக்குழு. தற்சமயம் 'கீர்த்தி 20' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.