Skip to main content

கண்கலங்கிய கார்த்தி - ஆறுதல் படுத்திய ஜெயம் ரவி; பாசப்பிணைப்பில் சோழர்கள்

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

Karthi gets emotional at ponniyin selvan 2 event

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகம் போலவே தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக நாளை (28.04.2023) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

அதற்காக இந்தியா முழுவதும் மும்பை, ஹைதராபாத், சென்னை என பல இடங்களில் தீவிரமாக ப்ரோமோஷன் செய்தனர் படக்குழுவினர். ஒரு நிகழ்ச்சியில் ஜெயம் ரவி எமோஷனலாக கண்கலங்கினார். அவரை விக்ரம் சமாதானப்படுத்தினார். மற்றொரு நிகழ்ச்சியில் மணிரத்னம் ஐஸ்வர்யா ராய் பற்றி பேசுகையில் திடீரென்று மணிரத்னம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் ஐஸ்வர்யா ராய். இது போன்ற பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தது. 

 

அந்த வகையில் மற்றொரு சுவாரசியமான நிகழ்வு நடைபெற்றுள்ளது. நாளை படம் வெளியாகவுள்ளதால் கடைசியாக நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கண்கலங்கியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கார்த்தி 135 நாள் படக்குழுவுடன் பணியாற்றிய அனுபவங்கள் மற்றும் படப்பிடிப்பின் போது நடந்த நிகழ்வுகளை பற்றி பேசியிருந்தார். அப்போது திடீரென எமோஷனலாகி கண்கலங்க தொடங்கிவிட்டார். அதை பார்த்த ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் அவரை சமாதானப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

 

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை வெளியாகவுள்ள இப்படத்திற்கு அதிகாலை மற்றும் சிறப்பு காட்சிகள் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் காலை 9 மணி முதல் முதல் காட்சி ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரசிகர் மரணம் - வீட்டுக்குச் சென்று ஜெயம் ரவி ஆறுதல்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
jayam ravi condolence to his fan passed away

சென்னை எம்.ஜி.ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்தவர் ராஜா (வயது 33). சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த இவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

ராஜாவின் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜா வீட்டுக்குச் சென்று, ராஜாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்தார். மேலும் ராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். 

ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர், அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளர்.  

Next Story

பூஜையுடன் பணிகளைத் தொடங்கிய சங்க நிர்வாகிகள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nadigar sangam building works start again with pooja

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்த பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

nadigar sangam building works start again with pooja

இந்த நிலையில் இன்று சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் தொடங்கியது. பூஜை நடத்தி பணிகளை தொடங்கினார்கள் சங்க நிர்வாகிகள். இந்த பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.