Skip to main content

'இனி யானை மாதிரி நா எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் பதியிற மாதிரி இருக்கும்' - பன்ச் பேசும் ஜீவா !

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
jiiva

 

சங்கிலி புங்கிலி, கலகலப்பு 2 ஆகிய படங்களுக்கு பிறகு தற்போது  கீ, கொரில்லா, ஜிப்ஸி படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் ஜீவா தன் ஹிந்தி பட பிரவேசம் குறித்து பேசும்போது...."சங்கிலி புங்கிலி படமும் கலகலப்பு 2 படமும் வெற்றி பெற்று எனக்கு உற்சாகத்தை கொடுத்தது. அதற்கு பிறகு நிறைய கதைகள் கேட்டேன். அதில் சிறந்ததாக கொரில்லா, ஜிப்ஸி என இரண்டை மட்டும் தேர்வு செய்தேன். இந்த இரண்டு படங்களும் ரொம்ப சிறப்பாக வந்திருக்கின்றன. தற்போது மொத்தம் ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது சூப்பர்குட் பிலிம்ஸ் 90 வது படமாக  'SGF 90' படத்தில் நானும், அருள்நிதியும் சேர்ந்து நடிக்க சூட்டிங் விறு விறுப்பாக  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பட டைட்டில் கூடிய சீக்கிரம் சொல்வோம். ஜாலியான படமாக இருக்கும். "1983 வேர்ல்ட் கப் " என்ற ஹிந்தி படத்தில் நடிக்கிறேன். ரன்வீர் சிங் நடிக்கிறார். மல்டி ஸ்டார் மூவி. பாகுபலி எப்படி ஸ்கிரீனில் பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியதோ அதுபோல் இந்த படமும் இருக்கும்.

 

 

100 கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கின்ற படம் இது. நான் கிரிக்கெட்டில் ரொம்ப ஆர்வம் உள்ளவன். நிறைய கிரிக்கெட் விளையாடி ஜெயிதந்துள்ளேன். அப்படிப் பட்ட எனக்கு கிடைத்த முதல் ஹிந்திப் படமே கிரிக்கெட் சம்மந்தப் படம் என்று சொல்லும் போது எப்போது  கேமரா முன் நிற்போம் என்று ஆர்வமாக இருக்கின்றது. 1983ல் இந்தியா வேர்ல்ட் கப் ஜெயித்து பெருமை தேடிக் கொடுத்த அந்த சம்பவங்கள் தான் கதைக்களம். கிட்டத்த 100 நாள் லண்டனில் ஷுட்டிங் நடைபெறவுள்ளது. அப்போது அந்த டீமில் இருந்த நல்ல கிரிக்கெட்டர்  கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சார். நான் அவரது கதாபாத்திரத்தில் நடிக்கின்றது எனக்கு பெருமை தானே. தமிழ் நாட்டு வீரர்கள் என்று எடுத்துக்கொண்டால் மொத்தம் நான்கு பேர் தான். அந்த கேரக்டர் எனக்கு கிடைத்தது பெருமையான விஷயம் தானே. மே மாதம் லண்டனில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. லகான் , M.S.டோனி படங்கள் வரிசையில் 1983 வேர்ல்ட் கப் படத்துக்கும் இப்போதே எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துள்ளது. இனி யானை மாதிரி நான் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் பதிகின்ற மாதிரி இருக்கும். 2019 எனக்கு மட்டுமில்லாமல் சினிமாவுக்கே நல்லது நிறைய நடக்கும் என்று நிறைய நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரையரங்கில் அடிதடி - தொண்டர்களால் பரபரப்பு

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
yatra 2 fans fight between jegam mogan reddy pawan kalyan

தெலுங்கில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. இதனை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டியின் அப்பாவான மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தவர். 'யாத்ரா' என்ற தலைப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'யாத்ரா 2' என எடுக்கப்பட்டுள்ளது.  ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துளளார். இப்படம் இன்று வெளியான நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்கள் திரையரங்கிற்கு வந்து மேள தாளத்துடன், வெடி வெடித்துக் கொண்டாடினர்.  

இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில், படம் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்களுக்கும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கும் கைகலப்பு ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பவன் கல்யாணின் ‘கேமராமேன் கங்காதோ ராம்பாபு’ படம் கடந்த 7 ஆம் தேதி ரீ ரிலீஸாகியுள்ளது. இந்த சூழலில் இந்த தொண்டர்களின் அடிதடி சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த சம்வவம் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

Next Story

முதலமைச்சராக கவனம் ஈர்த்த ஜீவா

Published on 05/01/2024 | Edited on 06/01/2024
jiiva as cm jegan mogan reddy in yatra 2

தெலுங்கில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இதனை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டியின் அப்பாவான மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தவர். 'யாத்ரா' என்ற தலைப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் நிலையில், ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியானது.  

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் ஒரு கண் தெரியாத நபர், ஜெகன் மோகன் ரெட்டி படம் பொருந்திய பதாகை வைத்துக் கொண்டு இரவு நேரத்தில் உட்காந்திருக்கிறார். அவரிடம் ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜீவா பேசும் காட்சி வருகிறது. பின்பு அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இருந்த முரண்பாடுகள் குறித்த காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து அவர் நடத்திய யாத்ரா, சட்டமன்றத்தில் நடக்கும் விஷயங்கள் என நீள்கிறது. இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.