Skip to main content

அட்லி தயாரிப்பில் ஜெயம் ரவி?

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

atlee

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லி. 'பிகில்' படத்தைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்திற்கான பணிகளில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் நடிகர் ஷாரூக் கானை வைத்து இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

'சங்கிலி புங்கிலி' என்னும் படத்தைத் தயாரித்துத் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் அட்லி. தற்போது 'அந்தகாரம்' என்னும் படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். அட்லி தற்போது முழு வீச்சாகத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் கூறுகிறது.

 

இதனைத் தொடர்ந்து அட்லி தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் ஜெயம் ரவியை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது.

 

ஜெயம் ரவியைச் சந்தித்தபோது, தனது உதவியாளரிடம் இருக்கும் கதை குறித்து அவரிடம் தெரிவித்துள்ளார் அட்லி. அப்போது கண்டிப்பாகக் கேட்பதாக உறுதியளித்திருக்கிறார் ஜெயம் ரவி. அந்தக் கதை ஜெயம் ரவிக்குப் பிடிக்கும்பட்சத்தில், அதனை அட்லியே தயாரிக்க முடிவு செய்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், இந்தக் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைத் தொடங்கும் எனத் தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்