Skip to main content

பிளாக் மார்க் வாங்கிய ஹன்சிகா

Published on 14/03/2018 | Edited on 15/03/2018

han


தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை ஹன்சிகா சமீபத்தில் பொங்கலுக்கு வெளிவந்த குலேபகாவலி படத்தில் நடித்தார். இதையடுத்து அவர்  மணிரத்னத்தின் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துவரும் 'துப்பாக்கி முனை' மற்றும் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ஆகியவற்றில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் புதிய படங்களின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ஹன்சிகா மீது சிம்ரன், மாளவிகா உள்பட சில தமிழ் நடிகைகளுக்கு மேனேஜராக இருந்த முனுசாமி தற்போது ஹன்சிகாவுக்கும் மானேஜராக பணி புரிந்து கொண்டிருக்கும் அவர் ஹன்சிகா மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில்... தான் இதுவரை பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா வழங்கவில்லை என்றும், அதை நடிகர் சங்கம் பெற்றுத் தரும்படியும் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

''இந்தக் கெட்ட கனவு முடிவுக்கு வர வேண்டும்'' - ஹன்சிகா இரங்கல்!

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

 

sgs

 

கரோனா பாதிப்பு நெருக்கடிக்கு இடையே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை 'அம்பன்' புயலாக மாறி முதலில் தமிழகத்தை நோக்கி வரலாம் எனக் கணிக்கப்பட்டது.
 


பிறகு இந்தப் புயல் வடமேற்கு திசை நோக்கி மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே ஆக்ரோஷமாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது 155 - 165 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் பல மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. மேலும் புயலுக்கு இதுவரை 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இதற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி அம்பன் புயல் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், அம்பன் புயல் மேற்கு வங்காளத்தின் பல மாவட்டங்களில் சிதைவுகள் மற்றும் அழிவுகளின் பாதையை விட்டுச் சென்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்காக என் இதயம் வெளியே செல்கிறது. இந்தக் கெட்ட கனவு முடிவுக்கு வர வேண்டும்! கொல்கத்தா மற்றும் ஒடிஷாவுக்கான என் பிரார்த்தனைகள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

ஏப்ரல் 14ஆம் தேதி களமிறங்கும் சரவணன் அருள் படம்?

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

லெஜண்ட் சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அருள் நடித்தது செம வைரலானது. 
 

sarvanan arul

 

சமூக வலைதளத்தில் அவருடைய விளம்பரங்கள் மீம்ஸ், வீடியோஸ் என்று பல கோணங்களில் பரவியது. பலர் அவருடைய வீடியோக்களை கலாய்த்தாலும், சிலர் அவருடைய கடை அவரே அதற்கு புரோமோஷன் தருகிறார் இதில் என்ன இருக்கிறது என்று தெரிவித்தனர். இவர் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடிப்பது பெருகி கொண்டே போனது. 
 

இந்நிலையில் இவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை, அதனால்தான் இவர் இவ்வாறு செய்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. படத்தில் நடிப்பதற்கு கதைகளும் கேட்டு வருகிறார் என்று செய்திகள் வெளியாகின. தற்போது உல்லாசம் படத்தை இயக்கிய ஜுடி-ஜெர்ரி இயக்கும் படத்தில் இவர் ஹீரோவாக நடிப்பதாகவும் பெரிய முன்னணி ஹீரோயின் ஒருவரை நடிக்க ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தை நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. 
 

கமர்ஷியல் மற்றுமின்றி படத்தில் கருத்தும் இருக்க வேண்டும் என்று சரவணன் அருள் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் செப்டம்பரில் தொடங்கி அடுத்த வருட ஏப்ரல் 14ல் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.