Skip to main content

விஜய் படப்பிடிப்பு எதிரொலி... தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மோதல் !

Published on 22/03/2018 | Edited on 23/03/2018
vijay shooting


திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து  கடந்த 1ஆம் தேதி முதல் பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியது. இதனால் தற்போது படப்பிடிப்பில் இருந்த முன்னணி நடிகர்களின் படங்களோடு சேர்த்து 30க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரை உலகை நம்பி வேலை செய்த 5 லட்சம் சினிமா தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு தடைகளை மீறி சென்னையில் நடைபெற்றது. மேலும் நாடோடிகள் 2 உள்ளிட்ட இன்னும் இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் நடைபெற்றன. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் இயக்குனர்கள் சங்கம் இடையே அவசர பேச்சு வார்த்தை சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும், இயக்குனர்கள் சேரன், அமீர், கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.முருகதாஸ், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். அப்போது நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது விஷாலுக்கும், இயக்குனர்கள் அமீர், சேரன் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது ஸ்டிரைக் நடந்து வரும் நிலையில், விஜய் படத்தின் படப்பிடிப்பிற்கு மட்டும் சிறப்பு அனுமதி அளித்ததால் இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தமிழ் திரைப்பட உலகில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

சர்கார் உண்மையில் லாபமா...? நஷ்டமா...? - பிரபல விநியோகஸ்தர் அதிர்ச்சி தகவல் 

Published on 21/11/2018 | Edited on 21/11/2018
vijay

 

 

 

விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள சர்கார் படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்  சென்னையில் போட்ட பணத்தை எடுத்துவிட்டோம் என ஒரு வாரத்திற்கு முன்பு திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது சர்கார் வசூல் குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் பட லாபம், நஷ்டம் குறித்து பேசியபோது... "படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு கண்டிப்பாக போட்ட பணம் வந்திருக்கும். மேலும் சிலருக்கு லாபமும் கிடைத்திருக்கும். ஒரு எழுபதிலுருந்து என்பது சதவீதம் வரை  தமிழ்நாட்டில் வசூல் செய்திருக்கும். சொல்லப்போனால் விநியோகஸ்தர்களுக்கு பெரிய லாபம் இல்லை" என்றார்.

 

 

Next Story

கேரளாவிலும் சர்ச்சையில் சிக்கிய சர்கார் ! விஜய் மீது புதிய வழக்கு 

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
vijay

 

 

 

விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையே படத்தில் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அ.தி.மு.க தொண்டர்கள் தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி விஜய்யின் பேனர்களை  கிழித்தனர். இதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயில் வீசி எரிக்கும் காட்சிகளை பட நிறுவனம் நீக்கியது. பின்னர் படத்தை மறுதணிக்கை செய்து திரையரங்குகளில் மறு வெளியீடு செய்தது படக்குழு. இந்நிலையில் தற்போது கேரளாவிலும் 'சர்கார்' படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. திருச்சூரில் உள்ள தியேட்டரில் விஜய் புகைப்பிடிக்கும் பேனர் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு திருச்சூர் சுகாதார துறை எதிர்ப்பு தெரிவித்து விஜய் மற்றும் கேரள விநியோகஸ்தர், தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. ஏற்கனவே கேரளாவிலுள்ள கொல்லத்தில் 'சர்கார்' படத்திற்காக நடிகர் விஜய்க்கு 175 அடியில் பேனர் வைத்து பின்னர் அதற்கு கேரள அரசு தடை விதித்ததையடுத்து அந்த பேனர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.