Skip to main content

பாதிப்பை ஏற்படுத்துமா வாடகை தாய் கலாச்சாரம்? மருத்துவர் காந்தராஜ் விளக்கம்

Published on 12/10/2022 | Edited on 12/10/2022

 

Dr Kantharaj talk about surrogate mother and nayanthara vignesh shivan

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும்  பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். ஆனால் விதிமுறைகளை மீறி இருவரும் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக விமர்சனம் எழுந்ததுடன், அமைச்சர் மா. சுப்ரமணியன் இது தொடர்பாக இருவரிடமும் விளக்கம் கேட்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக மருத்துவரும், அரசியல் விமர்சகருமான காந்தராஜை நக்கீரன் யூடியூப் மூலமாக சந்தித்தோம். அதில் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

“ஒரு நடிகைக்கு வாடகை தாய் மூலமாக குழந்தை பிறந்தது எல்லாம் ஒரு பிரச்சனையா? இன்றைக்கு திருமணம் செய்துகொள்ளாமல் ஆண், பெண் இருவரும் சேர்ந்து வாழும் உறவு முறை(living together) என்ற ஐரோப்பிய நாகரீகம் நம் நாட்டிற்கும் வந்துவிட்டது. அவர்களுக்கு திருமணமாகி  5 மாதங்கள்தான் ஆகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக  சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அப்போது கருத்தெரித்திருக்கலாம், அதன் மூலம் வாடகை தாய் மூலம் குழந்தையும் பெற்றிருக்கலாம். அது என்னை பொறுத்தவரையில் பெரிய விஷயமாக தெரியவில்லை. 

 

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதில் சில விதிமுறைகள் இருக்கிறது, அதை விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் மீறி விட்டதாக சொல்லப்படுகிறதே..

 

ஆமாம், இப்போ அந்த விதிமுறைகளை மீறியிருந்தால் என்ன செய்ய போகிறீர்கள். நயன்தாரா விக்னேஷ் சிவனை கைது செய்து சிறையில் அடைத்து விடுவீர்களா.. சொல்லுங்க, என்ன செய்ய போறீங்க? தேர்வு செய்வதற்கு தான்  விதிமுறையை பயன்படுத்த வேண்டும். ஒரு வேலை விருப்பம் இல்லாமல், ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி வாடகைத் தாயாக மாற்றியிருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம், விதிமுறை என்பதே இந்த மாதிரியான விஷயங்களுக்கு தான்  பயன்படுமே தவிர, அந்த பெண்ணே வாடகை தாயாக இருக்க சம்மதம் தெரிவித்த பிறகு என்ன நடவடிக்கை எடுக்க முடியும். இன்றைக்கு நம் நாட்டில் நிலவும் வறுமை நிலைக்கு தனது சிறுநீரகத்தை விற்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் வில்லிவாக்கத்திற்கு பெயரே கிட்னிவாக்கம் என்று சொல்லும் அளவுக்கு, அதிகப்படியான சிறுநீரக தானம் நடைபெற்றது. அதேபோன்று, வறுமையில் வாடும் ஏதோ பெண் வாடகை தாயாக இருந்திருப்பார்கள். வாடகை தாய் முறை மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து வந்தது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை காரணமாக, குழந்தை பெறுவதற்கு கடினம் என்பதால், நல்லா இருக்கும் பெணகள் கூட வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். 

 

இதில் ஒரு விசேஷம் என்ன தெரியுமா... வாடகை தாய் பழக்கத்தை முதன் முதலில் சொன்னது பெரியார்தான். 1933-ல் பெரியாரிடம் ஆணும் பெண்ணும் சமமாக இருப்பதை  பற்றி பேசுறீங்களே, பெண்ணுக்கு குழந்தை பிறப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு, வருங்காலத்தில் குழந்தைகளை குழாய் மூலமாக (டெஸ்ட் டியூப் பேபி) பெற்றுக்கொள்ளலாம் என்று சொன்னார். இதை கேட்ட சுவீடன் அறிஞர்கள், ஆச்சரியப்பட்டு இப்படிபட்ட சிந்தனை கொண்டவர் யார் என்று அறிந்து, அவருக்கு அங்கு ஒரு தனி துறையே  திறக்கும் அளவுக்கும் பெரியாரின் சிந்தனைகள் இருந்தது. 

 

காலப்போக்கில் வாடகை தாய் கலாச்சாரம் பெருகிக்கொண்டேதான் இருக்கும். 130 க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் வாடகை தாய் கிடைப்பது மிகவும் எளிதான ஒன்று. வறுமையின் காரணமாக சிலர் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதனை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாது.  கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்லத்தான் சட்டங்கள் பயன்படுமே தவிர, வாடகை தாய் மூலம் குழந்தை பெறுபவர்கள் தொடர்ந்து செய்து கொண்டேதான் இருப்பார்கள்.  இன்றைக்கு சிறுநீரக தானம் நெருங்கிய உறவினர்களுக்குதான் கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை இருக்கிறது. ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை. அதை ஏன் சட்டத்தால் தடுக்க முடியவில்லை. இன்று காசு கொடுத்தால் போதும் எதுவேண்டுமானாலும் கிடைக்கும் என்ற சூழலுக்கு  தள்ளப்பட்டிருக்கிறோம். 

 

வாடகை தாய் மூலம் வரும் குழந்தைகள் வளர்ந்து, பெற்றோர்களை போல வாடகை தாயின் மீதும் பாசம் வைக்கும் சூழல் ஏற்படுமா...

 

குழந்தைகள் வாடகை தாயின் மீது பாசம் வைக்கும் சூழல் வருமா என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும். வாடகை தாய் கலாச்சாரம் இப்போதுதான் பெரிதாக வந்து கொண்டிருக்கிறது. அதனால் இனி வரும் காலங்களில் இது பற்றி தெரிய வரும். ஆனால் வாடகைதாயின் மூலம் குழந்தை பெறுவதில் ஒரு விதிமுறை இருக்கிறது. வாடகைதாய்க்கு யாரின் குழந்தையை சுமக்கிறோம் என்று தெரியாது. அதை மருத்துவர்களும் வாடகைதாயிடம் சொல்லகூடாது என்பதுதான் விதிமுறை. அதனால் குழந்தைகள் வாடகை தாயின் மீது பாசம் வைக்கும் சூழல் ஏற்படாது. பெண்களாக பிறந்த அனைவரும் தான் ஒரு குழந்தைக்கு தாயாக வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார்கள். அதனால் வாடகை தாய் கலாச்சாரம் வந்துகொண்டேதான் இருக்கும். வாடகை தாய் மூலம் வரும் குழந்தைகள் குறைவாக இருக்கிறார்கள், அவர்கள் அதிகமாக வரும் போது எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயன்தாரா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nayanthara instagram story issue

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை இயக்கும் எல்.ஐ.சி படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து 2022ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். பின்பு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று கொண்டார். இதையடுத்து அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் தொழில்முனைவோராக  களம் இறங்கினார். இதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார். 

இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கினார். அதில் தனது படங்களின் ப்ரொமோஷன், தனது குழந்தைகளின் புகைப்படங்கள், தனது தொழில் நிறுவனத்தின் விளம்பரம் என ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் கணவர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்ததாக சர்சையானது. இதனால் அவரது திருமண உறவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. 

இதையடுத்து திருமண உறவு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் ‘நான் இழந்துவிட்டேன்’ (I'm lost) என குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் பல்வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

“என்னை ஐபிஎஸ் அதிகாரியாக்க ஆசைப்பட்டாங்க” - விக்னேஷ் சிவன்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
vignesh shivan speech in awarness short film released

போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியீட்டு விழா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர், இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயார் மீனாகுமாரி ஆகியோர் உள்ளிட்ட சில அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

ad

இந்த விழாவில் சென்னை எல்லைக்கு உட்பட்ட சாலைகளில், விபத்துக்களை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்யவும், ஒரு வழிப்பாதை, புதிய வேக வரம்புகள் போன்ற பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரு விழிப்புணர்வு குறும்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகன ஓட்டிகள் தவறான வழிகளிலிருந்து வாகனத்தை இயக்குவது குறித்தும், ஹெல்மட் அணியாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகள் குறித்தும் சிக்னல்களில் எல்லைக்கோட்டை மதிக்க வாகன ஓட்டிகளுக்கு வலியுறுத்தும் வகையிலும் ‘நீங்க ரோடு ராஜாவா?’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஷாந்தனு, யோகி பாபு, அர்ச்சனா, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனைத்து குறும்படங்களையும் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். 

விழாவில் விக்னேஷ் சிவன் பேசுகையில், “காவல் துறை முன்வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோக்களை, எனக்கு இயக்க எப்போதுமே 100 சதவீதம் ஆர்வம் இருக்கும். அது போன்ற முன்னெடுப்பு எப்போதுமே நேர்மையாக இருக்கும். இந்த குறுப்படங்கள் மக்களுக்கு ஈஸியாக புரியுர மாதிரி எளிய முறையில் எடுத்துள்ளோம். வெளிநாடுகளில் விதிமுறைகளை சரியாக பின்பற்றுவார்கள். ஆனால் நம்ம ஊரில் கொஞ்சம் மெத்தனமாகவே பின்பற்றுவார்கள். எல்லாருக்குமே தனிப்பட்ட முறையில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அது சரியாகும். நானும் போலீஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். என்னையுமே ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டாங்க. ஆனால் நான் திரைப்பட இயக்குநர் ஆகிவிட்டேன். அப்படி ஆனாலும் கூட காவல்துறை சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடுகிற போது ரொம்ப பெருமையாக சந்தோஷமாகவும் இருக்கும்” என்றார்.