Skip to main content

”மாஸ்டர், விக்ரம் பட அனுபவம் எந்த அளவிற்கு கைகொடுத்தது?” - இயக்குநர் ரத்னகுமார் பதில் 

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

Diretor Rathna Kumar

 

ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான குலு குலு திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இயக்குநர் ரத்னகுமாரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் குலு குலு படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

”கதை எழுதும்போது டைட்டில் இருக்க வேண்டும் என்பதால் பிறகு மாற்றிக்கொள்ளலாம் என்று நினைத்து தற்காலிகமாக குலு குலு என்று பெயர் வைத்தேன். மொத்த கதையும் படித்து முடித்த பிறகு இதைவிட பொருத்தமான டைட்டில் இந்தப் படத்திற்கு இருக்க முடியாது, அதனால் டைட்டிலை மாற்ற வேண்டாம் என்று சந்தானம் சொன்னார். எனக்கும் அது சரி என்று பட்டது. அதனால் டைட்டிலை மாற்றவில்லை. படம் பார்க்கும் போது ஏன் குலு குலுனு பெயர் வைத்தோம் என்று உங்களுக்கே புரியும். 

 

படத்தின் முதல் ஃப்ரேம்லயே கதை தொடங்கிவிடும். வழக்கமாக சந்தானம் பண்ணும் பாடி லாங்குவேஜ், ஒன்லைன் பஞ்ச்சை இந்தப் படத்தில் நிறைய கேரக்டர் பண்ணும். அதனால் கதை கேட்கும்போது ரொம்பவும் ஆர்வமாக சந்தானம் கேட்டார். கதையில் ஒரு புதுமை இருக்கிறது. அதைத்தான் இன்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்தக் கதை கண்டிப்பா ஜெயிக்கும் என்று நம்பிக்கையாக சொன்னார். ஏ சென்டர்களில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் கடைநிலை வரை இந்தப் படம் சென்று சேர என்னென்ன விஷயங்கள் படத்தில் இருந்ததோ அதையெல்லாம் மெருகேற்ற சந்தானம் ரொம்பவும் மெனக்கெட்டார். எடிட் முடிந்த பிறகுகூட நிறைய இன்புட்ஸ் கொடுத்தார். டப்பிங்கில் இந்த மாடுலேசனில் பேசுகிறேன், அப்படிப் பேசுகிறேன் என்று நிறைய மெனக்கெடலோடு பண்ணிக்கொடுத்தார்.

 

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் சிறப்பான இசையைக் கொடுத்திருக்கிறார். படத்தில் என் அப்பா ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் 50 வருடமாக சிலம்பம் மாஸ்டராக இருக்கிறார். ராமராஜன் தொடங்கி சிம்புவரை நிறைய பேருக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவருக்கு வேறு எதாவது படத்தில் நல்ல ரோல் கொடுக்கனும் என்று நினைத்தேன். சமீபத்தில் அப்பாவுக்கு கரோனா வந்ததால் ரொம்பவும் சோர்வாக இருந்தார். அவருக்கு எனர்ஜி கொடுக்குற மாதிரி இருக்கும் என்று நினைத்து இந்தப் படத்தில் நடிக்க வைத்தேன். 

 

மாஸ்டர், விக்ரம் படத்தில் பணியாற்றியது பெரிய அனுபவமாக இருந்தது. குறிப்பாக ஆக்‌ஷன் சீக்குவன்ஸ் எழுதும்போது அந்த அனுபவம் பெரிய அளவில் கைகொடுக்கிறது. குலு குலு அனைவருக்கும் பிடிக்கக்கூடிய படமாக இருக்கும். நிச்சயம் திரையரங்கில் வந்து பாருங்கள்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல ஹீரோவுடன் ஜோடி; ஹாரர் ஜானரில் நயன்தாரா

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

nayanthara next to pair with Raghava Lawrence under rathna kumar direction

 

‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார் அடுத்ததாக ஆடை, குலுகுலு ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இதனிடையே லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு லோகேஷுடன் இணைந்து திரைக்கதையும் எழுதி வருகிறார். அந்த வகையில், தற்போது விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் 'லியோ' படத்தில் பணியாற்றி வருகிறார். 

 

ad

 

இந்த நிலையில் ரத்னகுமார் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ராகவா லாரன்ஸை வைத்து ஒரு புது படம் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், ஹாரர் ஜானரில் இப்படம் உருவாகுவதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

நயன்தாரா, ஜெயம் ரவியின் 'இறைவன்' படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவாகும் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில், அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். ராகவா லாரன்ஸ் தற்போது பி.வாசு இயக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'ஜிகர்தண்டா 2' படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 


 

Next Story

'இந்தியப் பிரதமர்' காட்சி நீக்கம்; "இந்தியாவை பெயர்மாற்றம் செய்துவிடுங்கள்" - ரத்னகுமார் காட்டம்

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

Better change India into United States of India says director Rathna kumar

 

‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார் அடுத்ததாக ஆடை, குலுகுலு ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இதனிடையே லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு லோகேஷுடன் இணைந்து திரைக்கதையும் எழுதி வருகிறார். அந்த வகையில், தற்போது விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் 'லியோ' படத்தில் பணியாற்றி வருகிறார். 

 

ரத்னகுமார் இயக்கத்தில் கடைசியாக வெளியான குலுகுலு படம் தெலுங்கிலும் வெளியானது. அந்த தெலுங்கு பதிப்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் 'இந்தியப் பிரதமர்' என்று குறிப்பிடும் காட்சி சென்சாரில் நீக்கப்பட்டிருந்தது. இது செய்தியாக வெளியான நிலையில், அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரத்னகுமார், "திரைப்பட சென்சாரில் தன்னிச்சையாக காட்சிகளை நீக்குவது நியாயமற்றது. இது குலுகுலு படத்திற்கு நடந்தது.

 

அதற்காக மட்டும் நான் சொல்லவில்லை. ஜனநாயகத்தின் முக்கியத் தூணாக இருக்கும் கலை துறைக்கே இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்கிறீர்கள் என்றால், தமிழ்நாட்டை தமிழகம் என மாற்ற முயல்வதற்கு பதில், இந்தியாவை இந்திய ஐக்கிய நாடுகள் (United States of India) எனப் பெயர்மாற்றம் செய்துவிடுங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.