Skip to main content

அமிதாப்பச்சன், ஷாருக்கான், அஜய் தேவ்கன் ஆகியோர் மீது வழக்கு!

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

case filed against amitabh bachchan shahrukh khan and ajay devgan Pan Masala ads

 

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அமிதாப்பச்சன், ஷாருக்கான், அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் ஆகியோர் சமீபத்தில் தனியார் நிறுவனத்தின் பான்மசாலா விளம்பரத்தில் நடித்திருந்தனர் இது பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியது. இதனால் நடிகர் அக்ஷய் குமார் இவ்விளம்பரத்தில் நடித்ததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார். மேலும் அந்த நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார். 

 

இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த தமன்னா ஹாசிம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஷாருக்கான், அக்ஷய் குமார், அமிதாப்பச்சன்  ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த மனுவில், இளைஞர்களை தீய வலையில் ஈடுபட வைக்கும் போதை பொருள் விளம்பரத்தில் இவர்கள் நடித்து அவர்களை தவறாக வழி நடத்தி செல்கிறார்கள். அதனால் இவர்கள் மூவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்