Skip to main content

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய நயன்தாரா படக்குழு

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
annapoorani team helped affected people by chennai floods

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே திரைப் பிரபலங்கள் விஜய், சூர்யா, கார்த்தி, நயன்தாரா உள்ளிட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகப் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். மேலும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நாடு படக்குழுவினர், மற்றும் வெப்பன் படக்குழு பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினர். இந்த நிலையில் நயன் தாராவின் அன்னபூரணி படக்குழு பாதிக்கபட்டவர்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.  

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் ஆகியோரின் தயாரிப்பில் கடந்த 1ஆம் தேதி வெளியான படம் அன்னபூரணி. 

சார்ந்த செய்திகள்