
காலா, 2.0 படங்கள் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பரபரப்பு ஓய்வதற்குள்ளேயே தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு மேலும் பரபரப்பை கூட்டினார். அதன்படி இந்த புதிய படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இதனிடையே இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் சமீபத்தில் உலா வந்த வண்ணம் உள்ள நிலையில் தற்போது மே மாதம் துவங்க இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்துள்ளதாக அனிருத் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.