Skip to main content

உங்கள் கடையை நயன்தாரா திறந்துவைக்க வேண்டுமா? - இதுதான் சம்பளம்

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

சினிமாவில் பிஸியாக இருந் தாலும் விளம்பரப் படங்களிலும் நடித்து நாலு காசு சம்பாதித்து நல்லபடியாக செட்டில் ஆவோம் என தீயாய் வேலை செய்கிறார்கள் ஹீரோயின்கள். இது மட்டும் போதாது ஜவுளிக்கடை, நகைக் கடை, செல்ஃபோன் கடை, பியூட்டி பார்லர், இன்னும் சொல்லப் போனால் அப்பளம், ஊறுகாய் மொத்தமாய் விற்கும் கடைகளையும் திறந்து கல்லா கட்டுவதில் ஹீரோயின்கள் செம கில்லாடி. திறப்பு விழாவிற்கு ஹீரோயின்கள் வாங்கும் ரேட் பட்டியலைக் கொடுத்துள்ளோம். இதைப் பார்த்து தமிழ் கூறும் நல்லுலகம் பயன் அடையட்டும்.

சமந்தா: ஹைதரா பாத், சென்னை என்றால் 10 லட்சம். தமிழ்நாட்டின் வேறு மாவட்டங்களுக்கு 15 லட்சம்.

நயன்தாரா: திருவ னந்தபுரம் 10 லட்சம், சென்னை 20 லட்சம். மற்ற மாவட்டங்கள் 15 லட்சம்.

samanthanayanthararailakshmi


ஹன்சிகா: சென்னை 2 லட்சம். மற்ற மாவட்டங் கள் 5 லட்சம்.

ஐஸ்வர்யா ராய்: மும்பை 10 லட்சம், சென்னை 15 லட்சம்.

வித்யா பாலன்: மும்பை 10 லட்சம், பெங்களூரு 15 லட்சம், சென்னை 20 லட்சம்.

ராய்லட்சுமி: சென்னை 3 லட்சம், மற்ற மாவட்டங்கள் 5 லட்சம்.

த்ரிஷா: சென்னை 5 லட்சம், வெளி மாவட்டங் கள் 7 லட்சம்.

நமீதா: சென்னை 1 லட்சம், வெளி மாவட்டங் கள் 2 லட்சம்.

hanshikaamalabal



ஜோதிகா: சென்னை 1 லட்சம், வெளி மாவட்டங் கள் 3 லட்சம்.

அமலாபால்: கேரளா 5 லட்சம், சென்னை 7 லட்சம், வெளி மாவட்டங்கள் 8 லட்சம்.

சிருஷ்டி டாங்கே: சென்னை 2 லட்சம், வெளி மாவட்டங்கள் 4 லட்சம்.

கீர்த்தி சுரேஷ்: அம்பானி குரூப்பின் டிரெண்ட்ஸ் விளம்பர மாடலாக இருப்பதால் ஜவுளிக் கடை திறப்பு விழாவை ஒத்துக் கொள்வதில்லை. மற்றபடி கடைகள் என்றால் சென்னை 10 லட்சம், வெளி மாவட்டங்கள் 20 லட்சம்.

"மேயாத மான்' இந்துஜா: சென்னை 2 லட்சம், வெளி மாவட்டங்கள் 4 லட்சம்.

vidhyabalantrisha


எமி ஜாக்சன்: சென்னை 8 லட்சம், வெளி மாவட்டங்கள் 15 லட்சம்.

தன்ஷிகா: சென்னை 1 லட்சம், வெளி மாவட்டங்கள் 2 லட்சம்.

சீதா: சென்னை 50 ஆயிரம், வெளி மாவட்டங்கள் 1 லட்சம்.

(கண்டிஷன்ஸ் அப்ளை என கம்பெனிகள் கண்ணுக்குத் தெரியாத சின்ன எழுத்தில் போடுவதுபோல, கையில் ரொக்கம் போக, தங்குவதற்கு தரத்துக்குத் தகுந்தபடி ஸ்டார் ஓட்டல், விமான டிக்கெட், உயர்தர உணவு வகைகளும் ஹீரோயின்கள் கண்டிஷன் களில் உண்டு)

ஸ்ஸ்ஸ்... அப்பாடா நாட்டுக்கு எம்பூட்டுப் பெரிய முக்கிய, அரிய சேதியக் கொடுத்துட்டோம்னு நினைக் கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்குது மக்களே!

-பரமேஷ்
 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.