உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,85,807 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,820 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,65,659 பேர் குணமடைந்துள்ளனர்.
![kajol](http://image.nakkheeran.in/cdn/farfuture/XcPHKBEQtKNtlVE-s1cjwn0PkrXv2A1Vgn_0DtIpZbQ/1585656109/sites/default/files/inline-images/Kajol-1.jpg)
இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான கஜோலுக்கும் அவரது மகளுக்கும் கரோனா பரவிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியுள்ளது. இந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் கஜோலின் கணவரும் பாலிவுட்டின் பிரபல நடிகருமான அஜய் தேவ்கன். இதுகுறித்து அவர் ட்விட்டரில், “எனது மனைவி மற்றும் மகள் பற்றி விசாரிக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த வதந்தியில் துளிகூட உண்மையில்லை" என்று கூறியுள்ளார்.