Skip to main content

"இது நடந்திருக்க கூடாது" - கண்கலங்கிய சூர்யா!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

actor surya tribute puneeth rajkumar

 

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்திய திரைப் பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து புனித் ராஜ்குமார் உடல் காண்டீவராவில் உள்ள அவரது தந்தை சமாதிக்குப் பக்கத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, பிரபு உள்ளிட்டோர் புனித் ராஜ்குமார் சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். 

 

இந்நிலையில் நடிகர் சூர்யா இன்று (05.11.2021) புனித் ராஜ்குமார் சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இது நடந்திருக்கக் கூடாது, அவரின் மறைவை என்னாலும், என் குடும்பத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அம்மா, அப்பா மிகுந்த கவலையில் இருக்கின்றனர். புனித் எப்போது பார்த்தாலும் சிரித்துக்கொண்டேதான் இருப்பார். தற்போது அவர் மறைந்தாலும் ரசிகர்களின் இதயத்தில் சிரித்துக்கொண்டே இருக்கட்டும். அவரின் மறைவில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் " எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்